7 செப்., 2009

- எலக்சன் ஆயாஹே பாய்- Brought you by Quick Gun Sarvan

             சிவசேனா தலைவர் பாலாசாகிப் ஜி தாக்கரேவின் மனைவி மறைந்த
மீனாதாயி தாக்கரேவின் நினைவு தினம் இன்று அனுஸ்டிக்க பட்டது. மும்பைக்கு அருகில் உள்ள கர்ஜத்தில் நடைபெற்ற பொதுக்கூடம் ஒன்றில் சிவசேனாவின் பேச்சாளரும் சட்ட மன்ற உறுப்பினருமான நீலம் தாயி கேரே பேசிய போது எடுத்த படம். அருகில் உள்ளவர்கள் சட்டமன்ற உறுப்பினர் தேவேந்திர சாட்டம், கர்ஜத் தாலுகா சிவசேனா பிரமுக் ரேகா தாக்கரெ ஆகியோர் உடனிருக்கின்றனர்.
    
                 மராட்டிய மாநில காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று மும்பையில் காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. அடுத்த மாதம் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் இந்த கூட்டத்தில் விவாதிக்கபட்டது.
இந்த கூட்டதில் மத்திய அமைச்சர்கள் சுஷில் குமார் சின்டே, விலாஸ் ராவ் தேஷ்முக், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குருதாஸ் காமத், முன்னாள் உள்த்துறை மந்திரி சிவ் ராஜ் பாட்டில் , முன்னாள் முதல் மந்திரி ஏ, ஆர் அந்துலே, மற்றும் மாராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் மானிக்ராவ் தாக்கரே, மும்பை காங்கிரஸ் தலைவர் க்ருபா சங்கர் சிங் , மற்றும் வீரப்ப மொய்லி ஆகியோர் கலந்து கொண்டனர்

            நாடளுமன்ற மிகவும் இளைய உறுப்பினரான மிலிந்த் தியோரா  மும்பையில் மௌலான ஆசாத் மைனாரிட்டி கமிட்டியியின் சார்பாக நடந்த ஒரு விழாவில் பங்கேற்று ஒருவருக்கு
நிதி உதவி வழங்கும் காட்சி - எலக்சன் ஆயாஹே பாய்-


மும்பை நரிமன் பாய்ண்டில் உள்ள பாரதிய ஜனதா தலைமை அலுவலகமான கமலாயத்தில் 10 வருட காங்கிரஸ்- தேசிய வாத காங்கிரஸ் கட்சிகளின் குறைகளை புத்தகமாக வெளியிட்ட படம். இருப்பவர்கள், மும்பை பாரதிய ஜனதா செயலர் வினோத தாவெடே, சட்ட மன்ற உறுப்பினர் மதுசவான், செயல் தலைவர் பிரகாஸ் ஜவ்டேகர், பாரதிய ஜனதா மராட்டிய மாநில தலைவர் நிதின் கட்கரி, சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் பாண்டுரங் புட்கர் ஆகியோர் கலந்து கொண்டனர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக