21 டிச., 2009

பாட்டிற்கு எனக்கு ராசி இல்லை: (ஆர் ஆர் பாட்டில்) மராட்டிய மாநில உள்த்துறை மந்திரி





  நவீன மராட்டிய மாநிலம் உருவாக காரணமாக இருந்த மராட்டியத்தின்  முதல்-மந்திரி திரு.யஷ்வந்த்ராவ் சவான், மும்பையில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் செண்டரில் இவரது 25-ம் ஆண்டு நினைவு தினம் நடைபெற்றது.

யஷ்வந்த்ராவ் பற்றிய சிறு குறிப்பு:

                                 சாதாரன குடும்பத்தில் பிறந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மராட்டிய மாநிலத்தில் உரிமைக்காக போராடி 1960-ஒன்றுபட்ட மராட்டிய மாநிலம் உருவாக முக்கிய காரணமாக திகழ்ந்தார். மாநிலத்தின் முதலாவது முதல் மந்திரியாக பதவியேற்றவர். தன்னுடைய முதல் மந்திரி பதவியில் இருந்தபோது மகாராஷ்டிரா பேரில் மட்டும் மகாராஷ்டிரா அல்ல இது மகான்களுடைய ராஜ்ஜியம் இங்கு தான் சமூகத்தில் பல துன்பங்களுக்கு இடையே உழன்றுகொண்டு இருந்த அடித்தள மக்களுக்கு உரிமைகளை பெற்றுகொடுக்க முயன்ற துக்காராம் மகாராஜ் தோன்றினார். கோலி குண்டுகளாய சிதரிகிடந்த மராட்டிய ராஜ்ஜியத்தின் எல்லைகளை நிர்ணயித்து பெஷ்வா, சுல்த்தான், மற்றும் பெரும் நிலச்ஜமீந்தார்களிடம் இருந்து மராட்டிய மக்களை மீட்டு மராட்டியர்களுக்கு என பெரும் சாம்ராஜ்ஜியம் படைத்த சாம்ராட் சத்ரபதி சிவாஜி மகராஜ் பிறந்த மண், இந்த தலைவர்களுக்கு எல்லாம் பெருமை சேர்க்கும் விதத்திலும் இந்தியா மட்டுமல்ல உலகமே போற்றும் உத்தம தலைவர் டாக்டர் அம்பேத்காரை தந்த மண், அதனால் இது மாகான்களின் தேசம் மகாதேசம்(மகாராஷ்டிரம்) என்ற பெயரை தாங்கி நிற்கிறது.

                      மராட்டியத்தின் இந்த பெருமையை உலகம் எங்கும் அறிய செய்யவேண்டும் என்றால் இந்த மண்ணின் பெருமையை பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கோடு அனைத்து துறைகளிலும் தனிப்பட்ட கவனம் செலுத்தினார்.

 கல்வி, விவசாயம், தனிநபர் நலம், கலை, தொழில் வளர்ச்சி, பொருளாதாரம், அடித்தள கட்டமைப்பு, போன்ற அனைத்து துறைகளிலும் யஷ்வந்த் ராவ் சவான் அவர்கள் கவனம் செலுத்தி நவீன மாராட்டியத்திற்கு அடித்தளமிட்டார். அவர் வகுத்த பாதையில் தான் வசந்த்ராவ் சவான்,சரத்பவார், விலாஸ் ராவ் மற்றும் தற்போதைய முதல் மந்திரி அசோக்சவான் அவர்கள் சென்று மராட்டியத்தை உருவாக்கி வருகிறார்கள். யஷ்வந்த் ராவின் நினைவு தினமான நவம்பர் 25-ஐ ஒவ்வொரு வருடமும் மிகசிறந்த முறையில் கொண்டாடுவது மட்டுமின்றி அவரது பெயரில் கலை , கல்வி, தொழில், அறிவியல் போன்ற துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பாராட்டு வழங்கி யஷ்வந்த் ராவ் பெயரில் பட்டம் வழங்கி பெருமை படுத்துகின்றனர்.

2009-ம் வருட யஷ்வந்த் ராவ் நினைவு தினத்தன்று யஷ்வந்த் ராவ் சவான் மையத்தில் உள்ள அரங்கில் வைத்து மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பிரபல இந்துஸ்தானி இசை பாடகி திருமதி கிஷோரி அமேர்கருக்கு யஷ்வந்த்ராவ் பெயரில் பட்டம் வழங்கி சிறப்பித்தனர்.

சரத்பவார் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் இந்த வருடம் குளிர்கால கூட்ட தொடர் நடைபெறுவதால் சரத்பவார் அவர்கள் கலந்துகொள்ள வில்லை, அவருக்கு பதிலாக மராட்டிய மாநில துணைமுதல் மந்திரி சஜன் புஜ்பால், உள்துறை மந்திரி ஆர் ஆர் அபா பாட்டில், மற்றும் முன்னாள் தலைமை நீதிபதி சுஜாதா மேனன், மராட்டிய மாநில தேசியவாத கட்சி சட்டமன்ற தலைவர் அருன் குஜராத்தி மற்றும் யஷ்வந்த்ராவ் சவான் மையத்தின் செயற்குழு உறுப்பினர்கள் உசைன் தள்வாய் யஷ்வந்த் ராவ் மையத்தின் துணைத்தலைவர், மையத்தின் நிர்வாகி ச.க காளே ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவை துவக்கிவைத்து  யஷ்வந்த்ராவ் சவான் மைய செயளாளர் அருன் குஜராத்தி பேசிய போது யஷ்வந்த் ராவ் சவான் அவர்கள் மராட்டியத்தின் வளர்ச்சியை தனது மனதில் கொண்டு தனது பணிக்காலத்தின் இறுதிவரை பணிபுரிந்தார். அவர் ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் ஈடுபாடு கொண்டவரில்லை, மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து துறையிலும் அவர் தனிப்பட்ட கவனம் செலுத்தினார். அவர் நட்டுவைத்த மராட்டிய மரம் இன்று வளர்ந்து பலன் தந்துகொண்டு இருக்கிறது. அன்னாரின் நினைவு தினத்தில் கலைஉலகில் புகழ்பெற்ற திருமதி கிஷோரி

அமர்கருக்கும் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவருக்கும் பட்டமும் பாராட்டும் வழங்குவதில் பெருமை கொள்கிறேன். இசை என்பது மனிதரின் மனங்களில் உள்ள இன்னல்களை களைந்து அமைதியை ஏற்படுத்தும் ஒரு மிகச்சிறந்த சாதனம் இசை இசைஉலகில் சாதனைபடைத்த கிஷோரி அமர்கருக்கு வாழ்நாள் சேவைக்கு இந்த விருது வழங்குவதில் பெருமை அடைகிறேன்” இவ்வாறு அருன் குஜராத்தில் கூறினார்.



                    கல்வி துறை யஷ்வந்த்ராவ் சவான் விருது இந்த வருடம் மும்பை பல்கலைகழகத்தில் சட்ட மேற்படிப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு பராட்டுகளுடன் ரூ.10000 கான காசோலையையும் உள்துறை மந்திரி ஆர்.ஆர்.அபா பாட்டில் வழங்கினார். அதன் பிறகு பேசிய ஆர்.ஆர்.பாட்டில் எப்போழுதும் போல தன்னுடைய பேச்சினால் அரங்கில் கூடியிருந்த பலரின் உள்ளம் கவர்ந்தார், அவரது பேச்சில் சில பகுதிகள் “ துணைமுதல் மந்திரி சஜன் புஜ்பால் அவர்கலுக்கு, சட்டமன்ற தேசியவாத கட்சி தலைவர் அருன் குஜராத்தி அவர்களுக்கும், முன்னாள் நீதிபதி சுஜாதா மனோகர் அவர்களுக்கும் மற்றும் மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும், விழாவிற்கு வருகைதந்திருக்கும் அன்பர்களுக்கும் பத்திரிக்கை தோழர்களுக்கு எனது வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன். அரசியல் களத்தில் இசை என்பது எங்களுக்கு அதிக தொலைவில் தெரிகிறது. சமயம் கிடைக்கும் போது தொலைக்காட்சி மட்டும் தான் இது போன்ற விழாக்களின் போது யாராவது பாடினால் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து கேட்கும் வாய்ப்பு கிடைக்கும், ஆரம்ப காலங்களில் எனது வீட்டில் ஒரு ரேடியோ பெட்டி இருக்கும் நான் 8-ம் வகுப்பு படிக்கும் போது அந்த ரேடியோ பெட்டியை எனது மூத்த சகோதரர் வாங்கி வந்தார். சாமானியத்தில் சில நாட்கள் நன்றாக படித்து கொண்டிருந்தால் எங்கள் யாருக்கும் அந்த ரேடியோ பெட்டி கிடைக்காது அப்பா, அல்லது அண்ணா அவர்களின் கையில் தான் அது ஒலித்து கொண்டு இருக்கும், திடிரென்று அதில் சத்தம் சரியாக வரவில்லை, அதனால் அதை வீட்டின் ஒரு மூலையில் தூக்கி எறிய அதுதான் எனது முதல் இசை தோழனாக மாறியது, வயல்வெளிக்கு தூக்கிசென்று முதலில் அதை பிரித்து மிகபெரிய ஆராய்ச்சி செய்த பிறகு வெறும் சத்தம் மட்டும் கேட்க ஆரம்பித்த உடன் நானும் எனது தோழர்களும் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை, அன்றில் இருந்து பாட்டு வருகிறதோ அந்த ரேடியோ எங்கள் கையில் பட்டு பல இன்னல்களை அடைந்தது, சில நேரங்களில் நன்றாக பாடிக்கொண்டு இருக்கும் பிறகு இரைச்சல்வரும் உடனே இடது வலது என்று தட்டும் போது சில சமயங்களில் பாட ஆரம்பிக்கும், அந்த ரேடியோ பெட்டிக்கென்று என்னிடம் பள்ளி மாணவர்கள் நன்பர்களாக மாறினர். இத்தனைக்கும் அது பாடாத ரேடியோ பெட்டி,

                      கல்லூரி முடிந்து அரசியலுக்கு வந்த பிறகு ஒரு முறை விமானத்தில் பயனம் செய்து கொண்டிருந்த போது அருகில் உள்ள ஒருவர் பாடல் கேட்டுகொண்டு இருந்தார், நானும் கேட்கலாம் என்ற நினைப்பில் விமான பணிப்பெண்ணிடம் எனக்கும்  காதில் மாட்டி கேட்ப்பானை கொடுத்தால் நானும் பாடல்களை ரசிப்பேன் என்றேன், அந்த பணிப்பெண்ணும்  ஹெட்போனை கொண்டு வர அதை இனைத்தும் முதலில் ஒன்றும் கேட்கவில்லை, விமான பணிப்பென்னிடம் ஒன்றும் கேட்கவில்லை மேடம் என்றேன், அவரும் முதலில் லேசாக தட்டி பார்த்தார்,( எனக்கு அதை கண்ட்தும் சிறுவயது சிறிய வயது  ரேடியோ பெட்டி நினைவில் வந்தது) பிறகு வேறு ஒன்றைகொண்டு வர சென்றவர், வெகுநேரம் கழித்து இன்னோரு ஹெட்போனை கொண்டுவந்தார், அதை இணைத்து காதில் மாட்டி பாடல் கேட்க போகும் நேரத்தில் பாடல் நின்றுவிட்டது,

பைலட்டின் அறிவிப்பு இறங்கும் இடம் வந்துவிட்டது, என அறிக்கை வர ஏமாந்த முகத்துடன் திரும்பினேன், இறங்கும் போது அந்த பணிப்பெண் என்னிடம் மன்னிப்பு கேட்டாள், அதற்கு நான் எனக்கு பாட்டிற்கு சிறியவயதில் இருந்தே ராசி இல்லை மேடம் என்று சொல்லிவிட்டேன். இருப்பினும் இசை என்பது மனதிற்கு அமைதிகொடுக்கு ஒரு அருமருந்து, சட்ட மேற்படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்று இன்று பரிசு பெற்ற மாணவருக்கு எனது பாராட்டை தெரிவித்து கொள்கிரேன். நானும் சட்டம் பயின்றவந்தான் எனது மதிப்பெண்களை இந்த மேடையில் கூற முடியாது, வகுப்பில் ஆசிரியர் இல்லாத போது மட்டும் தான் நான் அதிகம் சென்று இருக்கிறேன்.  நல்ல மதிப்பெண் பெற்று இருந்தால் இன்று என்னை இந்த மேடையில் யாரும் பார்த்திருக்க முடியாது, யாராருக்கு என்ன எழுதி இருக்கிறதோ ஆனால் எனக்கு இப்படி எழுதி இருக்கிறது. சட்டக்கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் வகுப்பில் சென்று அமர்ந்திருந்தேன், ஆசிரியர் வந்தார் பாடம் நடத்திவிட்டு சென்றுவிட்டார், நான் ஒன்றும் புரியாமல் அருகில் உள்ள மாணவரை கேட்டேன் அந்த வகுப்பு மூன்றாம் ஆண்டு சட்ட வகுப்பு. நான் முதலாம் ஆண்டு வகுப்பிற்கு சென்றபோது வகுப்பு முடிந்து எல்லோரும் வீட்டிற்கு சென்றுவிட்டார்கள். இவர் என்னை போல் இல்லாமல் முதல் நாளே சரியான வகுப்பிற்கு சென்று அமர்ந்து படித்து இருக்கிறார். யஷ்வாந்த்ராவ் சவான் சாகேபை பொருத்தவரை இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு முன்னோடி , மராட்டியம் மாகான்களின் ராஜ்ஜியம் தான் ஆனால் இங்கு எந்த ஒரு மகான்களையும் பணிபுரிய விடுவதில்லை, ஒருவர் முன்சென்றால் மற்றோருவர் நண்டுபோல் இருந்து பின்னால் இழுத்து விடும் வேலைகள் மராட்டியத்தில் அதிகம் உண்டு அதனால் தான் அம்பேதகர் போன்ற மகான்களின் பணி இன்றும் முழுமையடையாமல் இருக்கிறது இவ்வாறு உள்த்துறை மந்திரி ஆர்.ஆர்.ஆபா பாட்டில் கூறினார்.

இவர் பேச ஆரம்பித்தில் இருந்து பேச்சு முடியும் வரை கூட்டம் முழுவதும் சிரிப்பலை ஒலித்துகொண்டே இருந்தது. மராட்டியம் போன்ற பெரிய மாநிலத்தில் உள்த்துறை மந்திரிபதவியில் இருந்துகொண்டு இறுக்கமான சூழலில் கூட இவ்வளவு நகைச்சுவையாக பேசும் கலை ஆர்.ஆர் பாட்டிலுக்கே உரித்தான ஒன்று ஆகும்.

இதனை அடுத்து பேசிய மராட்டிய துணைமுதல் மந்திரி சஜன் புஜ்பால்  “ நான் மும்பை மேயராக இருக்கும் போது ஒரு முறை மத்திய பிரதேச அரசு கிஷோரி அம்ரேக்கர் அம்மாவிற்கு 1 லட்ச ரூபாய் பரிசு கொடுத்தது. நான் மிகவும் ஆச்சர்யபட்டுவிட்டேன் ஒரு மராட்டிய பாடகிக்கு வேறுமாநிலம் பரிசு வழங்குகிறது நாம் ஏன் சும்மா இருக்கவேண்டும் என்று உடனே கமிட்டி ஒன்றை அமைத்து மராட்டியத்தில் புகழ்பெற்ற பாடகர்களை உற்சாகபடுத்தும் நோக்கில் மும்பை மாநகராட்சியில் கமிட்டி ஒன்றை அமைத்தேன். அரசியலில் இசை என்பது தூரமானது என்று உள்த்துறை மந்திரி குறிப்பிட்டு இருந்தார். அது உண்மைதான் அனைத்து தரப்பு மக்களின் நிறைகுறைகளை நிறைவேற்றும் பொறுப்பில் இருக்கும் எங்களுக்கு இசை கேட்க நேரம் இருப்பதில்லை, ஆனால் மக்களின் துயரம் களைய இனிய இசை வழங்கு  இசைக்கலைஞர்களுக்கு பரிசு வழங்குவதில் நாங்கள் பெருமை அடைகிறோம். இன்று என்ன பாடல்கள் இசைக்கின்றனர் என்றே தெரியவில்லை, கோலி மாரோ பேஜே மே என்கிறார்கள், கல்லாஸ் என்கிறார்கள், இசை என்பது மூளையில் ஏறி நரம்புகள் வழியாக நினைவில் கலந்து உடலுக்கு அமைதியை தருகிறது. இது போன்ற பாடல்கள் கேட்கும் பொழுது மூளை செயலிழந்து போய்விடும் போல் இருக்கிறது. பாடல்வரிகளை தேடவேண்டியுள்ளது.

அப்படியே தேடிகிடைத்தாலும் அதன் அர்த்தம் தெரியவில்லை டிக்னரியில் இல்லாதா வார்த்தைகள் எல்லாம் பாடல்களாக இருக்கிறது. ரப்ஜிக் ரப்ஜிக் ரங் இந்த மூன்று வரிகள் பாடல் முழுவதும் ஒருபாடகர் பாடி இருக்கிறார், அதற்கு விளக்கம் என்ன வென்று யாராது சொல்வார்களா, இது போன்ற பாடல்கள் வலம் வரும் காலத்திலும் கிஷோரி அம்ரேர்கர் அவர்களின் இந்துஸ்தானிய இசை தனித்து விளங்குகிறது என்றால் அது அந்த இசைக்கு இருக்கும் தனி மரியாதை அம்மையாருக்கு இந்த விருது வழங்குவதில் நான் பெருமை அடைகிறேன்” இவ்வாறு துணைமுதல் மந்திரி சஜன்புஜ்பபல் கூறினார்.

ரூ 2 லட்சமும் பராட்டு பத்திரமும் இந்துஸ்தானிய இசை அமைப்பாளர் கிஷோர்அம்ரேகருக்கு துணைமுதல் மந்திரி சஜன்புஜ்பால் வழங்கி கவுரவித்தார்.                   

19 டிச., 2009

எபிசோட் நம்பர் 2



  ஃபகிம், அன்சாரி மும்பை தாக்குதல் முடிந்த நான்காவதுவாரம், உத்திரபிரதேசத்தில் வைத்து கைது செய்யபட்டனர். இருவரிடன் இருந்து பெற்ற கையெழுத்தும், சுட்டு கொல்லபட்ட தீவிரவாதிகளிடம் இருந்து பெற்ற சில கையெழுத்து வரைபடங்களும் ஒத்து போனது. நவம்பர் முதல் ஜனவரி இரண்டாம் தேதிவரை கதையின் கரு கிடைக்காமல் அல்லாடிகொண்டு இருந்த பாதுகாப்பு துறையினருக்கு(மும்பை காவல்த்துறை இதர) ஃபாகிம், அன்சாரி மூலம் கரு கிடைத்தது. உடனே கதை ஆரம்பமானது. முன்னுடை-லஷ்கர் எ தொய்யபா- நீண்ட கால திட்டம்- இந்திய பொருளாதாரம்-மும்பை- கடல்வழி-பணய கைதி-கொலைகள்-சுபம்.

கிர்காவ் கடற்கரையில் இஸ்மாயில் கொல்லப்பட்டது, ஒரே ஒருதீவிரவாதி அஸ்மல் கசாப் பிடிபட்டது, புரியாத மெட்ரோ தியேட்டர் அருகில் ஒரு காரை கடத்தி செல்கின்றனர். கிர்காவ் கடற்கரையில் போலீசாரால் அந்த கார் வழிமறிக்கபடுகிறது. காரில் இருந்தும் துப்பாக்கி சூடு வெளியில் போலீசார் துப்பாக்கி சூடு இறுதியில் கார் நிற்கிறது. சில வினாடி அமைதிக்கு பிறகு ஹெட்கான்ஸ்டபிள் ஓம்ளே காரின் கதவை திறக்கிறார். கசாப் ஒம்ளேவை சுட்டுகொல்கிறான். அதன் பிறகு அவனை சுடாமல் (பொன்னே பூவே) என போலீசார் கைது செய்கிறார்கள் சரி அவனை உயிரோடு பிடித்தது பாராட்ட கூடிய விடயம்.

கசாப் எப்படி உயிர் பிழைத்தான் என்பது மில்லியன் டாலர் கேள்வி ஒன்று காரில் ஏறிய உடனே முன்னால் நன்றாக உடலை முன்சிட்டின் இடையில் ஒளிந்திருக்க வேண்டும். இதற்கு குறைந்தது 5 நிமிடமாவது பிடிக்கும், அதுவும் கசாப் போன்று ஒருவன் முன்புறத்தில் ஒளிவது இயலாத காரியம், அப்படியே அவள் உயிர் பிழைக்க ஒளிந்தால் உடன் வரும் இஸ்மாயில் சும்மா விடுவானா!!!!

கர்கரே மற்றும் மூன்று போலீஸ் உயரதிகாரிகள் மரணம் , கசாப் உயிருடன் பிடிபட்டது எல்லாம் முள்ளிவாய்க்கால் மர்மம்.
ஒருவருடம் கோர்ட்விசாரனை நேற்றுடன் முடிந்துவிட்டது. நாளையில் இருந்து வாக்கு மூலம் பெறப்படும் அதாவது இதை இதை நீ சொன்னாய் இதெல்லாம் சரியா என்று குற்றவாளியிடம் கேட்கபடும்.
இந்த நிலையில் அக்டோபர் 3 தேதி மும்பை தாக்குதல் பார்ட் 2 சிகாகோவில் துவங்குகிறது. ஆம் டேவின் கோல்மன் ஹெட்லி மற்றும் தன்வர் ரானா என்ற இரண்டு அமேரிக்க, கனடா நாட்டு குடியுறிமை பெற்ற பாகிஸ்தானியர்களின் மூலம்,
பல முறை மும்பை மற்றும் இந்தியாவின் பல நகரங்களுக்கு வந்திருக்கிறார்கள். இங்கு டிராவல் நிறுவனம் ஒன்றை நடத்தி இருக்கிறார்கள். பலரை பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கும் இந்தியாவில் இருந்து பல அயல்நாடுகளுக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள்.
அதாவது மும்பையில் தாஜ், சி எஸ் டி, ஒபராய் மற்றும் நரிமன் ஹவுஸ் போன்ற இடங்களை காணொலி படம் எடுத்து இருக்கிறார்கள். அதாவது மும்பை தாக்குதலின் மூளை இவர்கள் தான் ஆரம்ப கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது. அப்படி என்றால் இவர்களை பற்றி கசாபிற்கு தெரியாதா அல்லது அவனிடம் மும்பை பற்றி தகவல் தந்தவர்கள் வேறுயார் என்று  விசாரிப்பவர்கள் கேட்கவில்லையா,
ஒரு நாளைக்கு கசாபிற்கான செலவு 23 ஆயிரம்,தவிர 3 ஷிப்ட் திபெத் எல்லை காவல்படை போலீசார், இரண்டு சிறப்பு போலீஸ் உயரதிகாரி, இரண்டு சிறப்பு மருத்துவர், ஒரு சமையல்காரர், (குளிர்சாதன அறை-இது யூகம் மட்டுமே) 5 கண்காணிப்பு காமிரா(சிசிடிவி), இதர இதர இதர,,,,,
  இதில் மூன்று முறை மயக்க சோதனை செய்யபட்டதாம் அதில் அவன் பல உண்மைகளை சொன்னானாம், அப்படி என்றால் டேவிட் ஹெட்லி , தன்வர் ரானே பற்றி ஒன்றும் சொல்லவில்லையா? அல்லது கேட்கவில்லையா? முக்கியமான ஒன்று தீவிரவாதிகளுக்கு டேவிட் ஹெட்லி எடுத்த மும்பை விடியோ படங்கள் காட்டபட்டது. இது சமீபத்திய உண்மை,
டேவிட் ஹெட்லி மற்றும் தன்வர் ரானே மூலமாக மும்பை தாக்குதல் தொடரில் இரண்டாம் பாகம் ஆரம்பித்து இருக்கிறது. இதுவும் டிவி மெகா தொடர்போல இழுத்துசெல்லும் என்று தெரிகிறது.
நான் முன்பே குறிப்பிட்டது போன்று இனி கசாபிற்கு ராஜா போக வாழ்க்கைதான், விசாரனை மீண்டும் புதிய அத்தியாயத்தில் துவங்க இருக்கிறது.
அசோக் காம்டேவின் மனைவி வினிதா காம்டே தனது புத்தகமான கடைசி குண்டு(the last bullet)  என்ற புத்தகத்தில் இறுதியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அதாவது “பாதி உள்ளே பாதி வெளியே இருந்து தயாரிக்கபட்ட திட்டம் மும்பை தாக்குதல்” டேவிட் ஹெட்லிக்கு உதவியவர்கள் என்று இந்தியாவில் இதுவரை யாரும் கைது செய்யபடவில்லை, அல்லது அவர்கள் காப்பாற்றபடுகிறார்கள்.ஒரு கசப்பான உன்மைகள் விரைவில் வெளிவரும் அது மும்பை தாக்குதல் மூன்றாம் எபிசோட்டாக இருந்தாலும் இருக்கலாம்.
கசாப் கோர்ட்டில் சொன்ன சில வாக்குமூலம்:- மும்பை தாக்குதல் நடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவனை ஜுஹு ரோட்டில் வைத்து மும்பை போலீசார் கைது செய்தனர்.
:- மும்பைக்கு திரைப்படத்தில் நடிக்கும் நோக்கத்தில் கடந்த 6 மாதமாக மும்பையில் தங்கி இருந்தேன்.
:- நான் பாஸ்போடர்டுடன் கைது செய்யபட்டேன்.
:- எனது பாஸ்போட்டை போலீசார் கிழித்து போட்டு விட்டனர்.
:- நான் எ.கே 47 ஐ பார்த்ததே கிடையாது
:- டேவிட் ஹெட்லி உடன் மூன்று வெள்ளைக்காரர்கள் பகிஸ்தானில் என்னை சந்தித்தனர்.
:- அவர்கள் டிராவல் ஏஜெண்ட் என்று என்னிடம் சொல்லி இருந்தனர்.
:- பத்திரிக்கையில் உள்ள படத்தில் இருப்பவன் என்னை போல் உருவம் கொண்டவன்.
:- அது நான் அல்ல
:- எனக்கு வயது 22
:- ஆனால் கோர்ட் என்னை முதலில் 17 வயது என்று சொன்னது பிறகு 20 வயது என்று சொல்கிறது.
:- மும்பை போலீசார் என்னை வற்புறுத்தி வாக்குமூலம் பெறவைத்தார்கள்.
:- திரைப்படம் நடிப்பதற்காக நான் பலரை சந்தித்து இருக்கிறேன்.
எனக்கு வாய்ப்பு கொடுத்தால் அனைவரின் பெயரையும் சொல்லுவேன்.
  இன்னும் என்ன என்ன கூத்துக்கள் காத்து இருக்கின்றதோ



26 நவ., 2009

மும்பை 26/11 என்ற எனது புத்தகத்தில் இருந்து (1)

  தர்காவிற்கு செல்ல இருந்த குடும்பம் தனது தந்தையை இழந்தது.
மும்பை குர்லாவை சேர்ந்த முகமது ஜேக்காப் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு சொந்த ஊர் திருவண்ணாமலை நகரம். பிழைப்பதற்காக மும்பை வந்த இவர் வருமானவரித்துறை கண்சல்டாக இருந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் இவரது மூத்த சகோதரி, சகோதரியின் மகன் யாக்கோபு, தனது மனைவி ஒரு வயது குழந்தையுடன் சி.எஸ்.டி ரெயில் நிலையம் வந்தார்கள். இவர்கள் அன்று இரவு சென்னை மெயிலில் கர்னாடகா மாநிலத்தில் உள்ள குல்பர்கா தர்காவிற்கு செல்ல இருந்தனர். இவர்களது குழந்தை பிறந்த உடன் தர்காவிற்கு வருவதாக வேண்டிக் கொண்டனர். ரெயில் முன்பதிவு கிடைக்க பல நாட்களுக்கு முன்பே முயற்சி செய்தனர். ஆனால் முன்பதிவு கிடைக்காததால் உடன் டிக்கேட்டிலேயே பயணம் செய்ய முடிவு செய்தனர்.
இதனால் விரைவில் மும்பை சி.எஸ்.டி ரெயில் நிலையம் வந்து பயணிகள் அமரும் இடத்தில் காத்திருந்தனர். தனது தந்தை சகோதரி மற்றும் தனது மனைவி குழந்தைகளை அங்கு அமர வைத்து விட்டு வெளியில் சென்று சாப்பிட
பொருட்கள் வாங்கி வரலாம் என்று நினைத்து தனது மருமகனுடன் வெளியே சென்றார். வெளியில் சென்ற சிறிது நேரத்தில் ரெயில் நிலையத்தில் இருந்து பலர் அலறி அடித்து கொண்டு ஓடிவந்தனர். நாங்களும் ஏதோவிபரீதம் நடந்து விட்டது என்று நினைத்து அங்கு செல்ல முயன்றால் யாரும் எங்களை அங்கு விடவில்லை. எங்கு
பார்த்தலும் மரண ஓலம் எனது மனைவியும் சகோதரியும் நாங்கள் உட்கார வைத்த இடத்தில் இல்லை. அவர்கள் சில வினாடிகளுக்கு முன்பு தான் குழந்தையை எடுத்துக்கொன்டு அருகில் உள்ள பாத்ரூமிற்குள் நுழைந்தார்கள். அந்த நேரம் பார்த்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் எங்களது தந்தையின் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து கீழே விழுந்து கிடந்தார். இதை கண்டதும் எனது சகோதரியின் மகன் எனது தந்தையை காப்பாற்ற ஓடினான். இவனை கண்டதும் அங்கு நின்றுகொண்டிருந்த தீவிரவாதிகள் அவனையும் சுட்டனர். தீவிரவாதிகள் சுட்டதில் எனது சகோதரி மகனின் முதுகு தண்டுவடத்தில் குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் மும்பை ஜே.ஜே மருத்துவமனையில் சேர்க்கபட்டனர். எனது தந்தை மருத்துவமனையில் சேர்க்கபடும்
முன்பே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இவ்வாறு முகம்மது ஜோக்கப் கூறினார்.

வெட்கம் கெட்ட உலகம்

 

  மும்பை தாக்குதல் நேரடி அனுபவத்தால் வெதனையின் உச்சத்தில் இருந்து இருக்கிறேன்,

 மும்பை மாநகராட்சி இரண்டு நாட்கள் கழித்து பிரதமர் வருகிறார் அதற்கு சிறப்பு அனுமதி வாங்கவேண்டும் என்ற நினைப்பில் மாநகராட்சி பத்திரிக்கையாளர் சங்கத்தில் அமர்ந்திருந்த போது திடிரென விளக்குகள் அனைத்தும் அனைக்கபட்டு விட்டது. நாங்கள் அமர்ந்திருக்கு இடம் உள்பகுதியில் அமந்திருந்ததால் வெளியில் நடப்பது எதுவும் தெரியாது. இருட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் மொபைல் வெளிச்சத்தில் கதவை திறந்த போது பாதுகாவலர்கள் யாரும் வெளியே செல்லவேண்டாம் என்றும், சி எஸ் டி யில் இருவர் துப்பாக்கியால் சுடுகிறார்கள்
என்றும் கூவினர். வளாகத்தில் வரும் போது லெசாக சத்தம் கேட்டது. அனைவர் முகத்திலும் பயத்தின் ரேகை தெரிந்ததுயு
வெகுநேரம் கழித்து போலீஸ் சைரன் சத்தம் எல்லாம் குறைந்த பிறகு சரியாக 10:40 கீ ழே வந்தால் சி.எஸ்.டியில் ரத்தகளரி
யாரையும் உள்ளே நுழையவிடவில்லை, பல அதிகாரிகள் இறந்தாகவும் தகவல் ஆனால் தூரத்தில் இருந்து பார்த்தேன்
இரத்தால் உரைந்த உடலங்கள்,

  தாக்குதல் நடந்த ஓட்டல் நிர்வாகம் சில்பா செட்டியில் திருமன அழைப்பிதழை விட அதிக செலவில் அழைப்பிதழ் அடித்து கொண்டாடுகிறது. இரண்டு ஓட்டல் நிர்வாகமும் இலவச விளம்பரம் தேடுவதற்கு உலகில் உள்ள அனைத்து பத்திரிகைகளுக்கும் தகவல் தருகிறது.
டி.வி க்களோ திரைக்கதை வசனம் எழுதி வினாடிக்கு வினாடி மொபைல் போன்கள், அழகு சாமான்கள், வாகனங்கள் போன்ற விளம்பரங்களை பாதியாக போட்டு பாதியில் மும்பை நிகழ்வு, எல்லாவற்றையும் மிஞ்சும் அளவிற்கு ஐடியா
செய்தது இன்று இரவு ஐடியா மொபைலில் பேசப்படும் பொழுது அதில் வரும் பணமெல்லாம் பாரதிய போலீஸ் போர்ஸிற்கு செல்லுமாம் ( அப்படி ஒரு போர்ஸ் இருக்கிறதா????)
  பிரதம மந்திரியோ மும்பைதாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு தண்டனை தந்தே தீரூவோம் என்கிறார்.
முதலில் நாட்டின் பொருளாதோரத்தோடு விளையாடிய மதுகோடா, ராஜா, போன்றவர்களை தண்டியுங்கள், மும்பையை இனி நாங்களே பாதுகாத்துகொள்கிறோம்,

வெட்கம் கெட்ட மனிதர்கள்
 

25 நவ., 2009

மும்பையில் மரவன் புலவு சச்சிதானந்தம் ஐயாவுடன்



 மும்பை,24.
   ஜெரிமெரி தமிழ் சங்கத்தின் சார்பாக தாராவி புத்தக அறிமுக விழாவிற்கு பிரபலங்களை அழைப்பதிலும் அதற்காக ஆயத்த பணிகளில் ஒரு புறம் இருக்க மராட்டிய அரசின் சிறப்பு டெஃபன்ஸ் பீராஸிக்க்யூட்டர் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் வழக்கறிஞர் (தமிழர்தான்)திரு சுகுமாரன் ஐயா அவர்கள் வெள்ளிக்கிழமை இரவு என்னிடன் போனில் மரவன் புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்கள் மும்பை வருகை புரிந்துள்ளார். சயானின் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருப்பதாகவும் உங்களை சந்திக்க வேண்டும் என்றும் கூறினார்.
 சாயானின் கடந்த வெள்ளி அன்று சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மின்னஞ்சல்களில் அறிமுகமாகி இருந்த போதும் நேரில் சந்தித்தது இல்லை. அதே நேரத்தில் புகைப்படம் கூட பார்த்தது இல்லை, ஆனால் அவரது காந்தாளகம் புத்தக நிலையத்தில் இருந்து அவர் எழுதிய பல புத்தகங்களை அள்ளிகொண்டு சென்று இருக்கிறேன். அவரது புத்தகத்தில் உள்ள சிறப்புகள் சிறிய புத்தகமாக இருந்தாலும் அதிக தகவல்கள் இருக்கும் மக்களிடன் போய் சேரும் தன்மை இது போன்ற புத்தகத்திற்கு உண்டு, கிழக்கு பத்ரி சார் அவர்களும் இதே பாணியை கடைபிடித்து தான் வெற்றி பெறுகிறார் என்பது எனது கணிப்பு.
 ஈழத்தமிழர்களுக்காக அவ்வப்போது குரல் கொடுத்து வரும் சிவசேனாவின் தலைவர் பாலாசாகிப் தாக்கரேவை சந்திக்க வந்திருப்பதாக கூறினார். ஆனால் அவர் வந்திருந்த சமயம், சிவசேனாவினர் ஐ.பி.என் லோக்மத் என்ற செய்தி நிறுவனத்தை அடித்து நெருக்கி இருந்தனர். சச்சின் டெண்டுல்கர் என்ற கிரிக்கேட் வீரருடனும் சில வார்த்தை போரில் இருந்ததால், தாக்கரேவின் இல்லம் கொஞ்சம் பரபரப்பாகவே இருந்தது.வெள்ளிக்கிழமை மாலை சந்திக்க நேரம் கேட்டு சென்ற போது திங்கள் அன்று பார்க்கலாம் என்று தாக்கரே வின் உதவியாளர் ரவி மாத்ரே கூறிஇருந்தார். சனிக்கிழமை அவருடன் உலக தமிழ் மாநாட்டில் மும்பை பற்றி தகவல் புத்தகம் வெளியிடவேண்டும் என்றும் அதற்கான சில ஆவனங்களை எழுதி தருமாறும் அது குறித்து ஆலோசனை நடத்தினோம்.
ஞாயிறு அன்று தாராவி புத்தக அறிமுக விழா ஜெரிமெரி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. அன்று பகலில் இருந்தே நான் பிரமுகர்களை அழைக்கவும் அதற்காக என்னையும் தயார் படுத்தி கொண்டு இருந்தேன். மாலை மும்பை மலாட் பகுதியில் வெறு ஒரு நிகழ்ச்சியை முடித்து விட்டு இரவு 9 மணி அளவில் உலக தமிழர் பேரமைப்பு தலைமை செயளாலர் திரு பத்மநாபன் ஐயா அவர்களுடன் விழாவிற்கு வருகை தந்திருந்தார். விழாவிற்கு வந்த தாராவி பற்றியும் தான் அறிந்த தகவல்களையும் ஈழத்தமிழர்கள் மற்றும் தாராவி தமிழர்கள் பற்றியும் ஒப்புமை ஒன்றை குறிப்பிட்டு இருந்தார். இரவு நிகழ்ச்சி முடிந்த பிறகு மறுநாள் திங்கள் அன்று பாலா சாகிப்தாக்கரேவை சந்திக்க வேண்டியது பற்றியும் அதற்காக ஏற்பாடுகள் பற்றியும் பேசிவிட்டு விடைபெற்றேன்.
திங்கள் அன்று மீண்டும் காலையில் அவரை சந்தித்து பாலாசாகிப் வீட்டிற்கு விரைந்தோம், இன்னும் அவரது வீடு பரபரப்பான சூழலில் தான் காணபட்டது. வீட்டிற்கு சென்ற பிறகு காவலாளிகளிடம் போராடவேண்டி இருந்தது. மீட்டிங் என்று எங்களை உள்ளே விடவே இல்லை, ஆனால் இறுதியாக தெரிந்தது பெரியவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அண்ணன் எழுந்திரிப்பார் திண்ணை எப்போ காலியாகும் என்ற நிலையில் முதலாம் நிலை தலைவர்கள், இரண்டாம் நிலை தலைவர்கள் போட்டியில் கட்சி நிலை இருந்தது. பெரியவரை சந்திக்கமுடியாது என்ற நிலை வந்த பிறகு உத்தவ் தாக்கரேவை சந்திக்க முயற்சி செய்தேன், ஆனால் ராஜ் தாக்கரே போன்று எந்த வேகம் காட்டாதா உத்தவ் நாங்கள் அனுப்பிய கடித்தை பார்த்து விட்டு தற்போதைய அரசியல் சூழலில் இது பற்றி ஒன்றும் செய்யமுடியாது என்று நிராசையுடன் பதில் சொல்லிவிட்டார். வெறுவழியில்லாமல்  கடிதமாவது அவர்களது கைகளில் போய் சேர்ந்ததே என்ற நிம்மதியில் காலாநகரை விட்டு வெளியே வந்தோம், மாட்டுங்கா லேபர் கேம்பில் மதிய உணவு உண்டுவிட்டு, இரண்டு பேரையும் அழைத்து கொண்டு சாகித்திய அகதாமி சென்றேன்.
சாகித்திய அகடாமியில் பணிபுரிந்து வரும் தமிழரான ராஜி அம்மா அவர்களுக்கு இருவரையும் அறிமுக படுத்தி வைத்தேன். இலக்கியம் மற்றும் பல விடயங்கள் முக்கியமாக சச்சிதானந்தம் ஐயா அவர்கள் பன்னிரு திருமறைகள் மொழிமாற்றம் பற்றி கணணியில் ராஜி மேடத்திற்கு விவரித்து கொண்டு இருந்தார். தன்னுடைய பணியிலும் பொறுமையாக சுமார் அரை மணிநேரம் பொருமையாக விளக்கத்தை கேட்டுகொண்டு இருந்தார். மராட்டி மொழிமாற்றம் பற்றி பேசிவிட்டு மேலும் சில புத்தகங்கள் வாங்க மும்பை சி எஸ் டி புறப்பட்டோம், செல்லும் போது ரெயிலில் புறப்படலாம் என்று நினைத்த போது நேரம் ஆகிவிடும் என்பதால் மகிழூந்தில் புறப்பட்டோம் பேர்தான் மகிழூந்து ஆனால் மகிழ்ச்சியாக செல்லமுடியாது. முதலில் பெரியவர்கள் வண்டியில் உள்ளே அமர்வதற்கே சிறு போராட்டம் நடத்த வேண்டும், அதன் பிறகு கால்களை முழுவதுமாக நீட்ட முடியாது, இன்னும் பல இருப்பிலும் அது கருப்பு மஞ்சள் மகிழூந்து , சி எஸ் டியில் பல புத்தகடைகள் ஏறி இறங்கியதும்,சி எஸ் டி வந்து சேர்ந்து கட்டிட அமைப்பும், அந்த கட்டிடத்தை கட்டிய 18-ம் நூற்றாண்டின் தமிழர்களின் திறமை பற்றியும் மதுரைமீனாட்சி அம்மன் கோவிலில் காணப்பட்ட கலை நுணுக்கத்தை காண்பித்து அங்கிருந்த மாடல் வி.டி(சி.எஸ்.டி) பில்டிங்கையும் (1850-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து வந்த எஞ்சீனியர் ஒருவர் செய்த மாடல்)அவரிடம் காண்பித்தேன்.

இறுதியாக பத்மநாபன் ஐயா அவர்களின் விருப்பபடி இந்தியாவின் தலைவாயில் (கேட் வே ஆப் இந்தியா) பார்க்க சென்றோம் அங்கிருந்து நினைவு பதிப்பிற்காக புகைப்படம் எடுத்து கொண்டு வந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடங்கள் போன்றவற்றை பார்வையிட்டு வந்தோம். நேரம் சரியாக 6:30 இரவு 8:30 மணிக்கு தாதாரில் இருந்து விரைவு தொடர்வண்டியில் சென்னை திரும்ப வேண்டும் அந்த நேரத்தில் டாக்ஸி எதுவும் கிடைக்கவில்லை, நேரம் ஆக ஆக எனக்கு பதட்டம் அதிகம் ஆகி கொண்டே போனது எங்கே வண்டி தவறவிட்டுவிடுவோமோ என்ற பதட்டம் இருக்க சச்சிதானந்தம் ஐயாவோ நிதானமாக ரெயிலில் தேவைப்படும் உணவு (நானும் தாஜ், கிராண்ட் ஹையாத், லெ மரிடைன்,தாரா போன்ற ஓட்டல்களிலுல் பிரிட்டீஸ் பெட்ரோலியத்தில் பணிபுரிந்த போதும் சரி பத்திரிக்கை துறையில் பல விழாக்களின் போதும் சென்று இருக்கிறேன், ஆனால் ஐயா வாங்கிய உணவு வகையை முதல் முதலாக கேள்விபட்டதும் மட்டுமில்லாமல் முதல் முதலாக பார்க்கவும் செய்தேன் ஹமாஸ் ஃபலாஃபலாஸ் இந்திய உணவு என்று ஐயா சொன்னார்கள் ஆனால் எனக்கு என்னவோ அது இத்தாலிய உணவு வகையோ என்று குழம்பி இருந்தேன்) வாங்கி கொண்டு அதன் கொலபாவில் உள்ள உணவுவகம் ஒன்றில் நாங்கள் மூவரும் சாப்பிட்டு விட்டு புறப்பட்டோம்
அதன் பிறகு நடந்தவைகள் எல்லாம் நிமிடம் தவறினாலும் தாதரில் தொடர்வண்டி தவறவிடுவோம், சரியக 7:20 வரை கொலாபாவில் எங்களுக்கு டாக்ஸி கிடைக்கவில்லை, அந்த நேரம் பார்த்து தமிழர் ஒருவர் தனது வணிடியில் எங்களை அழைத்து சி.எஸ்.டி நிலையம் விட்டு விட வேக வேகமாக ஓட்டமும் நடையுமாக சி.எஸ்.டி வந்து சேர்ந்தோம், எங்களது அவசரம் ஒரு புறம் இருந்தாலும் அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு மும்பை தனது அவசரத்தில் இயங்கி கொண்டு இருந்தது. வினாடிகள் கூட எங்களுக்கு தாமதமாக கூடாது, நெருக்கடியில் புறநகர் தொடர்  வண்டியில் ஏறினால் தாதரில் இறங்க முடியாது, நான் இறங்கி விடுவேன் ஆனால் பெரியவர்களான இரண்டு பேரும் நேராக தானா கொண்டு செல்லபடுவார்கள், அதனால் நிதானமாக யோசித்து ஊனமுற்றோருக்காக ஒதுக்கபட்ட பெட்டியில் ஏறி அமர்ந்துகொண்டோம். மும்பையில் பத்திரிக்கையாளர்கள் அவசரத்திற்கு புறநகர் தொடர்வண்டியில் மட்டும் பயணம் செய்யலாம் என்ற ஒரு விதி முறை இருக்கிறது,இதில் என்ன வென்றால் மூன்று பேருமே பத்திரிக்கையாளர்கள் தான், நான் மராட்டிய அரசு , பத்மநாபன் ஐயா அவர்கள் தமிழக , சச்சிதானந்தம் ஐயா அவர்கள் ஈழத்து பத்திரிக்கையாளர்கள், அதனால் நீண்டவரிசையில் டிக்கேட் வாங்காமல் விரைவு வண்டியில் அமர்ந்துவிட்டோம், வண்டியில் அமர்ந்த போது நேரம் சரியாக 7:50 புறநகர் வண்டி கிளம்பிய சில விநாடிகளில் சிக்னலில் நின்றுவிட மனதில் அச்சம் குடியேற துவங்கியது, ஆதன் பிறகு ரெயில் சரியாக 8:03 தாதர் நிலையம் நின்றது, ரெயில் நிலையத்தில் நாடோடி, கனேசன், அவரது நன்பர்கள், செந்தில் அவரது துனைவியாருடனும் குழந்தையுடனும் வழியனுப்ப வருகை தந்திருந்தார்.
அவர்களை தொடர்வண்டியில் அமர்த்திய உடன் எனக்கு மனதில் நிம்மதி குடிகொண்டது. சில நிமிட பேச்சுகளுக்கு பிறகு ரெயில் புறப்பட்டது.  இந்த முதியவர்களை இறுதிநேரத்தில் நிறைய நடக்கவிட்டு விட்டேன் என்ற ஒரு பழி இன்னும் எனது மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. ரெயில் வராமல் டாக்ஸியில் வந்திருந்தால் தாதருக்கு 9 மணிக்குதான் வந்திருப்போம். மறுநாள் மீண்டும் வழக்கம் போல் எனது பணியை துவங்கினேன் ஆனால் முன்பை விட நிறைய பொறுப்புகள் நிறைந்த ஒரு தமிழனாக

தாராவி புத்தகவெளியீட்டு விழா




மும்பை தாக்குதலில் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியில் கடந்த ஆண்டு எனது நினைவுகளை எனது அனுபவங்களை மரவன் புலவு சச்சிதானந்தம் மற்றும் பத்மநாபன் ஐயாவிடன் பகிர்ந்துகொண்டபோது




   மும்பையில் ஞாயிறு அன்று நடந்த தாராவி புத்தகவெளியீட்டு விழா

  மும்பை ஜெரிமெரி தமிழ் சங்கத்தின் சார்பாக சரவணா ராஜேந்திரன் எழுதிய தாராவி என்ற புத்தக அறிமுக விழா ஞாயிறு அன்று மாலை 7 மணிக்கு நடைபெற்றது. விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை மாநகராட்சி விருது பெற்ற தமிழறிஞர் ஐயா சின்னசாமி அவர்கள் பாட விழா விமர்சையாக துவங்கியது

         ஜெரிமேரி தமிழ் சங்கத்தின் செயளாளர் திரு. வ.இரா.தமிழ் நேசன் விழாவிற்கு கலந்துகொள்ள வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.

தலைமை ஏற்று பேசிய ஜெரிமெரி தமிழ் சங்க முன்னாள் தலைவர் திரு.பொ வெங்கடாசலம் தாராவி புத்தகம் பற்றிய பேசிய போது “ தாராவி புத்தகம் தாராவி பற்றியது மட்டுமல்ல மும்பையில் உள்ள அனைத்து வறுமை நிலையில் வாழும் மக்களின் பிரதிபலிப்பு. தாராவி புத்தகத்தில் உள்ளது போலவே மும்பையில் உள்ள பெரும்பாலான குடிசைபகுதிகளின் நிலை இருக்கிறது.

            சிறுவயதில் மும்பையில் இருந்து வரும் பலர்  ஊரில் கழிக்கும்  குறுகிய நாட்களிலும்  பகட்டுத்தனமாக ஒரு நாடக வாழ்க்கை வாழ்ந்து கிராமத்து மக்களை மும்பை என்பது சுவர்க்கம் போல் படம் காட்டுவார்கள். ஆனால் மும்பை வந்த பிறகு இது சுவர்க்கம் அல்ல நரகம் என்று தெரியும், தாராவியை பெறுத்த வரை தமிழர்கள் அதிகம் வாழ்ந்தாலும் அனைத்து பிராந்திய மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள தொழிற்கூடங்களில் அயராது உழைத்து வந்த வருமானத்தில் அழகான மும்பையை உறுவாக்கினார்கள். இவர்களின் உழைப்பில் முதலாளிகளின் வாழ்க்கை தரம் உயர்ந்தது. பலவருட போராட்ட வாழ்க்கையில் இந்த மக்களின் வாழ்க்கைதரம் இன்னும் உயரவில்லை,

             தாராவியை பற்றிய இந்த புத்தகம் நல்ல முன்னோட்டமாக இருந்தாலும் இன்னும் பல தகவல்கள் தரவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்” இவ்வாறு திரு.பெ.வெங்கடாசலம் அவர்கள் கூறினார்கள்.



                தாராவி புத்தகத்திற்கு ஆய்வுறை வழங்கி பேசிய தாராவியின் மூத்தவழக்கரிஞரும் முன்னாள் ஆசிரியரும், போல்ட் இந்தியா பத்திரிக்கையின் ஆசிரியருமாகிய திரு இரா.ராஜமணி அவர்கள் பேசியபோது தாராவியை பற்றி பல அருமையாக கருத்துக்களை அவருடைய அனுபவங்கள் மூலமாக பகிர்ந்து கொண்டார்கள்.

                 தாராவிக்கும் தமிழுக்கும் மிக நீண்ட கால தொடர்பு உண்டு என்பதை சரவணா ராஜேந்திரன் பல வரலாற்று சான்றிதழ்களுடன் விளக்கி இருக்கிறார். இருப்பினும் இந்த புத்தத்தில் மும்பை வாழ் தமிழர்களை கலை களஞ்சியன்களை பதிவு செய்யதவறிவிட்டார். இருந்த போதிலும் இந்த புத்தகம் தாராவி தமிழர்களுக்கு ஒரு சிறந்த முன்னுரையாக எடுத்து கொள்ளாம். வி.கே மேனன் நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டி இட்டார். அவரை எதிர்த்து சிவசேனா முதல் முதலாக போட்டி இட்டது.

               சிவ சேனாவின் வேட்பாளர் அந்த தேர்தலில் இழந்தார். தோல்வி அடைந்தார். வி.கே மேனன் தனது வெற்றிக்கும் மக்களுக்கு நன்றி சொல்ல தாராவி பகுதிக்கு வருகை புரிந்தார். அந்த நேரத்தில் முதல் முதலாக தாராவியில் உள்ள பல வாடிகளுக்கு அவர் செனறு பார்வை இடுகிறார். அந்த சிறு இடத்தில் பல நபர்கள் தங்கி இருப்பதையும் மனிதர்கள் வாழ வழியில்லாத ஒரு குறுகிய இடத்தில் 4,5 நபர்கள் வசிப்பதையும் அவர்கள் சந்தோசமாக இருப்பதையும் கண்டு வியந்து போனார். இந்த தாராவி தமிழர்களின் வாழ்க்கையை கண்டும் அவர்கள் சிறிய அறையில் அடுக்கு அடுக்கு படுக்கையில் படுத்து உறங்குவதை வைத்துதான் ரெயில்வேயில் சைடு பெர்த் டிசைன் செய்யபட்டது.

                                   மும்பை வி.டி ரெயில் நிலையத்தில்  படுக்கை வசதி கொண்ட முதல் ரெயில் பாம்பே-சிக்கந்திரா பாத் எக்ஸ்பிரஸ் விடப்பட்ட போது ரெயில்வேத்துறை அமைச்சர் இதை கூறினார். இந்திய ரெயில்களில் பெர்த் வசதி லண்டனையோ அல்லது வேறு எந்த நாட்டின் தொழில் நுட்பத்தை கண்டோ செய்யவில்லை, முழுக்க முழுக்க தாராவி தமிழரின் வாழ்க்கை நிலையை கருத்தில் கொண்டுதான் பெர்த் வசதி உருவாக்கபட்டு இருக்கிறது.

                         மும்பையில் பல பகுதிகளில் முக்கியமாக இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கணபதி சிலைகள் வைப்பது பிரச்சனைக்குறியதாக இருந்தது.இந்த தடைகளை எதிர்த்து தாராவி கிராஸ் ரோட்டில் கணேசர் கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். கணசர் ஊர்வலத்திற்கு பல பிரச்சனைகள் வந்தபோது நட்புனர்வுடன் அந்த பிரச்சனைகளை அனுகி இருதரப்பினருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் கணேசன் ஊர்வலம் நடத்தியவர்கள் தாராவி தமிழர்கள், பாபர் மசூதி இடிக்கபட்டபோதும் அதன் தாக்கத்தால் மத கலவரம் நடந்த போதும் தமிழகத்தில் அமைதி விளைந்தது போல் தாராவியிலும் அமைதிகாத்து சமூக நல்லிலக்கத்திற்கு தாராவி தமிழர்கள் உதாரணமாக அமைந்திருந்தனர் இவ்வாறு வழக்கறிஞர் இராசாமனி கூறினார்.

                                தாராவியில் முதல் தமிழ் பள்ளி ஆரம்பிக்கும் பொழுது அதனை பதிவு செய்த பெருமை ஐயா ராசாமணி அவர்களையே சாரும்.இவர் தாராவி பற்றிய 50 பதிவுகளை கட்டுரைகளாக தொகுத்து வைத்திருப்பதாகவும் அந்த தொகுப்புகளை புத்தகங்களாக கொண்டு வரும் ஆவலையும் கூறி இருந்தார். விரைவில் தாராவி 2 என்ற புத்தகம் வெளிவரவேண்டும் இதில் மேலும் பல தகவல்கள் இருக்கவேண்டும் என்ற தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தார்.



                                        மற்றுமொரு ஆய்வாளர் கவிஞர் ஆ ஜெய காண்டீபன் பேசிய போது” தாராவி புத்தகம் தமிழர்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டிருந்தார், ஒரு சில எழுத்து பிழைகளை தவிர்த்து விட்டு பார்க்கும் போது இது எதிர்கால தமிழர்களின் வாழ்க்கையில்  சிறந்த ஆவனமாக கருதபடும் என்றார். தாராவியில் உள்ள பல தமிழர்கள் தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொண்டு வாழ்ந்து வருகின்றனர். தற்போது தாராவி மேம்பாடு அடைந்த வருகிறது. தாராவியை சுற்றிலும் உள்ள போக்குவரத்துவசதிகளை பற்றி அவர் குறிப்பிட்டு இருந்தார். பூகோள ரீதியாக சுற்றிலும் எளிதில் போக்குவரத்து வசதிகளை கொண்டதாக இருந்தாலும் தாராவியிலும் ஒரு ரெயில் நிலையம் வரவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.



               விழாவில் பேசிய மும்பை மாநகராட்சி பத்திரிக்கையாளர் சங்க தலைவர் திரு விஸ்னு சோனாவானே பேசியபோது  “எனக்கு தமிழ் எழுதவும் பேசவும் தெரியாது இங்கு  பேசிய பலர் என்ன பேசினார்கள் என்று தெரியாவிட்டாலும் தாராவி பற்றிய பல உண்மைகளை நாங்களும் பத்திரிக்கையாளர் என்ற முறையில் கண்டு உணர்ந்து வருகிறோம். அரசுகள் தாராவியை ஏழ்மை நிறைந்த குடிசைப்பகுதியாகவே உலகிற்கு காட்டி வருகிறது. குடிசைகள் இருக்கும் வரை அரசுகளுக்கு இதை காட்டியே உலக வங்கியிடம் வளர்ச்சி என்ற பெயரில் பணம் வாங்கி கொண்டு இருக்கவேண்டும். தாராவி தமிழர்களின் வாழ்க்கை இன்று பல வசதிகள் நிறைந்தாக இருந்தாலும், சாதாரணமாக இருக்கவேண்டிய வசதிகள் கூட தாராவியில் இல்லை, முக்கியமாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்ட சுகாதார வசதிகள், வாழ்விடங்களுக்கு ஏற்ற ஆரம்ப கட்ட வசதிகள் கூட இல்லாத நிலையில் நூற்றாண்டுகளாக வாழ்ந்துகொண்டு வருகிறார்கள்.

                 தற்போது பல வசதிகள் பெருகிவிட்டாலும் அந்த குறுகிய பகுதியிலேயே மக்கள் வசித்து வருகின்றனர். அரசு செக்டார் திட்டம் என்ற பெயரில் மக்களை கடந்த சில வருடமாக அலைக்கழித்து வருகிறது. சர்வே என்ற பெயரில் ஒரு திட்டம் தீட்டுகிறார்கள். அதன் பிறகு அவர்களே தங்களின் திட்டங்களை திறும்ப பெற்றுகொண்டு மீண்டும் ஒரு சர்வே எடுக்கிறார்கள்,

                   தாராவியில் உள்ள படித்த பெண்கள் அனைவரும் இனைந்து வாழும் உரிமைகளை முழுமையாக பெற போராடவேண்டும், இன்று நமக்கு கிடைத்தது அவ்வளவுதான் என்று நாம் நினைத்து கொண்டிருக்கும் வகையில் அரசுகள் நமக்கு கிடைக்ககூடிய பல வசதிகளை திசைதிருப்பிவிடுகிறது. இதனால் யார் யாரோ பலன் அடைகிறார்கள். பெண்களினால் மாற்றங்களை கொண்டு வர முடியும் பெண்கள் தங்களின் வலிமைகளை வெளிப்படுத்த வேண்டும் மராட்டிய பெண்களை போல் தங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை துணிச்சலுடன் எதிர்த்து தங்களது உரிமைகளை பிறர் தங்களுக்கு முன்னாலேயே அனுபவித்துவருவதை ஒரு காலும் விட்டு விடக்கூடாது.

                தாராவி தமிழர்கள் தங்களுடைய கூட்டு புழுவாழ்க்கையை உடைத்து பிறமக்களுடன் கலக்க வேண்டும் தங்களது பறிக்கபடும் உரிமைகள் பற்றி உலகிற்கு எடுத்துகாட்டவேண்டிய பணி உங்களுக்கு இருக்கிறது. மும்பை பல கலாச்சாரத்தை தன்னுள் எடுத்து கொண்டு இருக்கிறது. இங்கு ஒருவருக்கு துண்பம் என்றால் பலர் ஒன்று சேர்ந்து நிலையை மாற்ற முயற்சிப்பார்கள், முதலில் நாம் நிலையை பற்றி தனக்கு அருகில் உள்ளவர்களுக்காகவாது தெரிவிக்க வேண்டும் அதை விட்டு விட்டு தங்களுக்குள்ளேயே விவாதித்துகொண்டு விளம்பர பிரியர்களின் வலையில் விழுந்து அவர்களின் பிரிவினைபேச்சுக்கு உட்பட்டு தங்களுக்கு உள்ளேயே பிரிவினைகளை ஏற்படுத்தி வாழ்ந்துவருவதாலேயே இதுவரை தாராவியில் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் வரவில்லை அப்படியே வந்தாலும் அது தமிழர்கள் அல்லாதா பிற மொழியினர் வசிக்கும்  தாராவி குடியிறுப்புகளில் என்பதையும் இங்கே குறிப்பிடுகிறேன் என மும்பை மாநராட்சி பத்திரிக்கையாளர் சங்க தலைவர் விஷ்னு சோனாவானே குறிப்பிட்டு இருந்தார்.



                முன்னிலை வகித்து பேசிய இணை தலைமை ஆட்சியாளர் திரு. சம்போதி பேசியதாவது “ தேவையில்லாத பகுதிகளை செழுமைபடுத்தி அவற்றில் குடியிருப்புகளை அமைத்து வசிப்பது தாராவி தமிழர்களின் சிறப்பியல்புகளாகும் ஆனால் பெரிய பெரிய பில்டர்கள் நன்னீர் குளங்களை எல்லாம் மண்மேடாக்கி அங்கு பிளாடுகளை போட்டு விற்பனை செய்துவருகின்றனர். இவற்றை அரசு கண்டு கொள்வதில்லை, மாறாக இவர்களின் திட்டங்களுக்கு எந்த ஒரு எதிர்விவாதமும் இல்லாமல் அனுமதி அளிப்பதும், ஏழைமக்களின் வீடுகளை வருடத்திற்கு ஒருமுறை இடித்து விரட்டுவதும் தேர்தல் வரும் போது அவர்களுக்கு வீடுகள் கட்டிதருவேன்  என்று ஆசை வார்த்தை கூறி அவர்களை ஏமாற்றுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. தாராவி மட்டுமல்ல மும்பை முழுவதுமே இதே போன்று ஒரு நிலை ஏற்பட்டுவருகிறது. இதை நாம் மாற்றி அமைக்க வேண்டும் நம் உரிமைகளை வாக்கு சீட்டின் மூலம் வெளிப்படுத்த வேண்டும், இந்த நாட்டில் வாழும்  மக்கள் அனைவரும் ஒரு குடியரசு தலைவருக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளையும்  பெற்று வாழ வழிவகை உள்ளது.

              அதனால் தான் முதல் குடிமகன் என்று கூட நாம் ஜனாதிபதியை குறிப்பிடுகின்றோம். முதல் குடிமகன் என்றாலும் கடைசி குடிமகன் என்றாலும் உரிமைகள் அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும், இங்கு அப்படி நடைபெறுவதில்லை, அதிகாரம் உள்ளவர்கள் அதிகாரம் இல்லாவர்களிடம் இருந்து பிடிங்கி வாழ்கின்றனர். இதை எதிர்த்து கேட்க துணிச்சல் இருந்தும் யாருக்கே நமக்கு கிடைத்து போதும் என்ற நிலையில் வாழ்கின்றனர். இவ்வாறு சம்போதி அவர்கள் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

                 இதனை அடுத்து பேசிய மும்பை பெண்கவிஞர் புதிய மாதவி அவர்கள் தாராவி பற்றிய தன்னுடைய எண்ணபாட்டை வெளிப்படுத்தி இருந்தார். அவர் கூறியதாவது “தாராவி என்னுடைய தாய் வீடு நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் தாராவியில் தான் அரசு வங்கியில் அதிகாரியாக பணியாற்றிய போதும் யாரும் என்னிடம் எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டால் நான் தைரியமாக நான் தாராவியில் இருக்கிறேன் என்று அப்போதே கூறி வந்தேன், தாராவி காந்தி கண்ட இந்தியாவின் நகரங்களில் மும்பையில் பல இடங்களில் பெண்கள் நடமாட முடியாது பாதுகாப்பற்ற தன்மை உண்டு ஆனால் தாராவியில் இரவு 12 மணிக்குகூட ஒரு பெண் அவசரதேவைக்கு கடைவீதிக்கு சென்றுவரமுடியும் அந்த அளவிற்கு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் தாராவி, தாராவியில் பெண்களுக்கு எதிரான வண்கொடுமைகள் பற்றி அவ்வளவாக கேள்வி பட்டதே இல்லை, வீடுகளுக்குள் ஏற்படும் பிரச்சனைகள் பல பத்திரிக்கைவாயிலாக அறிந்துகொண்ட போதும் இன்றுவரை தாராவியில் பொது இடத்தில் பெண்களுக்கு பிரச்சனைகள் வந்ததில்லை.

                    தாராவியில் எந்த இரு மத , சாதியினரும் ஒன்று கூடி கைகோர்த்து செல்வதை காணலாம், எனக்கு முன்பு பேசிய வக்கீல் ராசாமணி அவர்கள் கூறியது போல் தான் தாராவி தமிழர்களின் சமூக நல்லுரவு இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது” எனது தனது பேச்சில் குறிப்பிட்டு இருந்தார்இதனை அடுத்து பேசிய கே ஆர் மணி அவர்கள் தாராவியில் தமிழர்கள் குறித்து பல தகவல்களை ஐயா ராசாமணி அவர்களின் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்தது, இவரின் பதிவுகளை விரைவில் புத்தகமாக கொண்டு வரவேண்டும் என்று தனது எண்ணப்பாட்டை வெளிப்படுத்தினார்.

  விழாவின் இறுதி நேரத்தில் மரவன் புலவு க சச்சிதானந்தம் ஐயா அவர்கள் வருகை தந்து சிறப்பித்திருந்தார்.

இறுதி நேரமாகையால் அவரும் அவருடன் வந்திருந்த ஐயா உலகதமிழர்பேரவை செயளாளர் பத்மநாபன் அவர்களுன் அதிகம் உரைநிகழ்த்த முடியவில்லை


ஏற்புரையின் போது நூலாசிரியர் சரவணா ராஜேந்திரன் கூறியதாவது “ மதுரையில் பள்ளி இறுதியாண்டுகள் படித்துவிட்டு கல்லூரிபடிப்பிற்காக மும்பை வந்தேன். மும்பையில் இந்தி மற்றும் மராட்டி மொழி புதிதாக தெரிந்தாலும் உள்ளத்தில் உற்சாகமேற்று பயின்றதன் காரணமாக மராட்டி மொழியில் கல்லூரியில் சேர்ந்த இரண்டாம் ஆண்டே நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தேன். இந்த உற்சாக மராட்டிய மொழியில் உள்ள பல செய்திகளை தமிழில் மொழி பெயர்க்கும் ஆவலை என்னிடம் சேர்த்தது.கல்லூரி வாழ்க்கை  முடிந்ததும் மும்பை தமிழ் டைம்ஸில் கட்டுரைகள் எழுதிவந்ததேன். 1999-முதல் இணையங்களில் எழுதும் பழக்கம் ஏற்பட்டது, தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதிவந்த போது பல பெரியவர்களின் நட்புறவு கிடைத்தது. அப்படி கிடைத்த நட்பின் காரணமாக திரு மணி அவர்களின் அறிமுகம், நான் அலுவல் காரணமாக வட நாடு சென்றபோதஎனக்கு கிடைத்த ஒரு பாடத்தின் மூலம் இமயத்தில் உள்ள அமர்நாத் என்ற குகை பனிலிங்க கோவிலுக்கு செல்லும் ஆர்வம் மிகுந்தது . மண்ணில் இருந்து வின் நோக்கிய அந்த அற்புதமான திகில் மிகுந்த ஆன்மீக பயணம் பல ஆண்டுகளாக கட்டுரைகள் எழுதி வந்த எனக்கு ஒரு பயண புத்தகம் எழுதும் ஆர்வத்தை தூண்டியது. திரு மணி அவர்களின் மூலம் கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனர் பத்ரிசார் அவர்களின் நட்பு கிடைத்தும் எனது அமர்நாத் யாத்திரை புத்தக வடிவம் பெற்றது.



2008-ம் ஆண்டு அமர் நாத் யாத்திரை புத்தக வடிவில் வந்தது. இந்த இடைவெளியில் நான்  வருடங்களாக பணிபுரிந்து வந்த பிரிட்டீஸ் பெட்ரோலியம் நிறுவன பணியை துறந்து முழுநேர பத்திரிக்கையாளனாக மாறினேன். இந்த நிலையில் தான் மும்பை தாக்குதல் நடைபெற அந்த தாக்குதல் முழு புத்தகமாக கொண்டுவரும் எண்ணத்திற்கு பத்ரி சார் அவர்கள் வழிவகுத்தார், கிழக்குபதிப்பததின் தலைமை நூலாசிரியரும் பிரபல எழுத்தாளருமான திரு.பா ராகவன் சார் அவர்களின் உதவியுடன், பத்திரிக்கைகளை வாரபத்திரிக்கைகளில் பல அரசியல் கட்டுரைகள் , அரசியல் தலைப்பில் பல நூல்கள் எழுதிய திரு முத்துகுமார் அவர்களின் ஆலோசனையின் பேரில் பல தலைப்புகளில் புத்தகங்கள் எழுதிகொண்டு இருக்கிறேன். அந்த சங்கிலி தொடரில் ஆரம்ப நூல்கள் தான் சிவசேனா, உங்கள் கைகளில் தவழும் தாராவி. எழுத எழுந்த ஆர்வம் பல ஆயிரம் கிலோ மீட்டர் கடந்தும் ஒரு குட்டிதமிழகமாக மாறியதுதான். இதுவரை தாராவி பற்றி பல கட்டுரைகள் வந்தாலும் முழுவடிவமாக அதை பற்றி ஒரு பதிவு வெளியானதில்லை, இந்த குறையை தீர்த்துவைக்கும் நோக்கத்தில் வெளியானதுதான் இந்த தாராவி, தராவி பற்றி எழுதும் போது தாராவி மட்டுமல்ல நெல்லை, பூனா, போன்ற நகரங்களுக்கு சென்று தாராவி பற்றிய பல தகவல்களை திரட்டி எழுதி அதை முழுவடிவம் கொடுத்து எழுதியது மட்டுமல்லாமால் ஆதாரமாக மாநகர ஆவனங்கள், மற்றும் வரலாற்று புத்தகங்கள் வாயிலாக கொண்டு சேர்த்து கோர்வையாக எழுதியத்தான் இந்த தாராவி புத்தகம். புத்தகத்தை பற்றி பலர் குறிப்பிடும் போது எனது உள்ளம் நிறைவடைகிறது. இன்னும் பல தகவல்களை சேர்த்து விரைவில் தாராவி இரண்டு என்ற புத்தகம் வெளியிடுவேன் என்று கூறிகொண்டு இந்த புத்தக அறிமுக விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்த ஜெரிமேரி தமிழ் சங்க செயலாளர் திரு தமிழ் நேசன் அவர்களுக்கும், வருகை தந்த மரவன் புலவு சச்சிதானந்தம் அவர்களுக்கும், உலகதமிழர் பேரவை செயளாளர் திரு பத்மநாபன் ஐயா அவர்களுக்கும், ஜெரிமேரி தமிழ் சங்க நன்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை கூறிக்கொண்டு எனது பேச்சை முடிக்கிறேன். நன்றி வணக்கம்



                விழாவிற்கு ஜெரிமேரி சங்க தலைவர் வின்செண்ட் பால், தாராவி குறும்பட தயாரிப்பாளர் மதியழகன் சுப்பையா, ஜெரிமெரி தமிழ் சங்க தலைவர் கோ.சினிவாசகம், துணைத்தலைவர் இல முருகன், கவிஞர் கிங்பெல்,முன்னாள் செயலாளர் ஜெரிமேரி தமிழ்சங்கம் திரு ஓ.எம் காதார், தமிழ் காப்போம் இயக்க செயலாளர் இறை.ச.ராஜேந்திரன், கவிஞர் வழக்கறிஞர் பூலாங்குளம் ஜே.சுகுமாரன், ஜெரிமேரி தமிழ் சங்க முன்னாள் தலைவர் எஸ் லட்சுமனன், தமிழ் காப்போம் இயக்க பொருளாளர் திரு ப அந்தோணி , தமிழ் காப்போம் துணைசெயலாளர் திரு பால்வண்ணன் மற்றும் தமிழ் அறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் லக்‌ஷ்மி புத்திரன்,மூத்த பத்திரிக்கையாளர் சந்திரகாந்த் மகாதேவ் லிங்காயத், பத்திரிக்கையாளர் ஆசிப் அலி  பத்திரிக்கை அன்பர்கள்  பெரும் திரளாக வந்திருந்து தாராவி நூல் அறிமுகவிழாவில் கலந்துகொண்டனர்.






உலக தமிழர் பேரவை செயளாளர் திரு பத்மநாபன் அவர்களுடன் மும்பை மாநகராட்சி பத்திரிக்கையாளர் சங்கதலைவர் விஷ்னு சோனாவானே

   மும்பை மாவட்ட இணை ஆட்சியாளர் திரு சம்போதி காக்டே அவர்களுடன் மரவன் புலவு சச்சிதானந்தம்
   மொழி தெரியாவிட்டாலும் எனது அழைப்பை ஏற்று நிகழ்ச்சிக்கு ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் வாழ்த்துரை வழங்கிய மும்பை மாநகராட்சி பத்திரிக்கையாளர் சங்க தலவர் திரு விஷ்னு சோனாவானே

18 நவ., 2009

தாராவி புத்தக அறிமுக விழா.



அன்புடையீர் வரும் 22/11/09 ஞாயிறு அன்று மும்பையில் உள்ள ஜெரிமெரி தமிழ் சங்கத்தில் சரவணா ராஜெந்திரன் எழுதிய தாராவி தமிழ் புத்தக அறிமுக விழா நடைபெற இருக்கிறது.

   மும்பையில் உள்ள அன்பர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
  தமிழ்பிரஸ் இன்போ மும்பை
மும்பையில் உள்ள தமிழ்   எழுத்துலக பிரமுகர்களுடன்
சிறப்பு விருந்தினராக
Mr.Vishnu Sonavane
Chief of Municipal corporation of Greater mumbai Press Club

Mr. Abbas
Zee News Political editor

Mr.Dharmendra Jore
Hindustan times Editorial
Dy Chief of political bureau

Madam. Neha Parek
Times Group

Ashif ali
MCGM Correspondent
Uttar bhumi (hindi News Paper)

Madam. Ajanta vave
editor  Lakshdeep Marathi news paper

Arun
Lokmat Marathi News paper

Sashi
Mantralya press club (Govt of Maharashtra)

Mr. Sambothi
jay bharat


ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்.

7 நவ., 2009

முடிவுக்கு வந்த தெருக்கூத்து



மராட்டிய மாநிலத்தில் கடந்த 15 நாட்களாக நடந்து வந்த உனக்கு எத்தனை எனக்கு இத்தனை என்ற தெருக்கூத்து அரசியல் நாடகம் இன்று கவர்னரிடம் எம் எல் ஏக்கள் ஆதரவு கடிதம் கொடுத்தவுடன் முடிவிற்கு வந்தது. வெள்ளிகிழமை மாலை சரியாக 5:20 மணி அளவில் முதல் மந்திரி அசோக்சவான், துணைமுதல் மந்திரி சஜன் புஜ்பால், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் மாணிக்ராவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் ஆர் ஆர் பாட்டில் மற்றும் மும்பை பிரதேச காங் தலைவர் கிருபா சங்கர் சிங் மற்றும் பெரிய தலைவர்கள் புடைசூழ கவர்னர் மாளிகைக்கு சென்றனர். கவர்னர் மாளிகையில் கவர்னர் எஸ் சீ சமீரை சந்தித்து கூட்டனி எம் எல் ஏக்களில் 144 உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கும் கடிதத்தை முதல் மந்திரி அசோக் சவான் வழங்கினார்.  கவர்னரை சந்தித்துவிட்டு வெளியே வந்த முதல் மந்திரி அசோக்சவான் மராட்டிய மாநிலத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டனிக்கு அழைப்புவிடுமாறு கூறினோம். கூட்டனியின் 144 எம் எல் ஏக்கள் மற்றும் சுயோட்சைகளின் ஆதரவு கடிதங்களை கவர்னரிடம் தந்து இருக்கிறோம் எங்களுக்கு 170 எம் எல் ஏக்களின் ஆதரவு கிடைத்துள்ளது.
நாளை மாலை ஆட்சி கட்டிலில் அமர்வோம் என்றார்.





 தேசியவாத காங்கிரஸிற்கு உள்த்துறை மந்திரி பதவி சென்று உள்ளது என தெரிகிறது. நிதி அர்பன் டிவிலோப்மெண்ட் சாலை மேம்பாட்டு போன்ற முக்கியதுறைகளும் தேசியவாத காங்கிரஸ் பெற்று உள்ளதாக தெரிகிறது. இன்று மாலை டில்லி சென்ற அசோக்சவான் 2009 புதிய பார்முலாவை உறுவாக்கினோம் என்று கூறினார். ஆனால் மும்பையில் சற்று நேரத்திற்கு முன்பு பேசிய சஜன் புஜ்பால் 1999 பார்முலேவே பின்பற்ற பட்டுள்ளது என்றும் 23-20 என்பது அவர்கள் சொல்கிறார்கள். இருப்பினும் நாங்கள் கேட்ட துறைகள் எங்களுக்கு கிடைத்துவிட்டது என்றார்.
இது மராட்டியத்தின் வளர்ச்சியில் எங்கள் பங்கை அதிகரிக்கவே அன்றி எதிர்கட்சியினர் சொல்வது போல் தனிப்பட்ட முறையில் ஆதாயம் பெறுவதற்காக இல்லை என்றார்

பா எல்லாம் இருந்தும் தவமிருந்து பெற்ற குழந்தையால் நிம்மதி இழந்து தவிக்கும் தந்தையின் கதை


 அப்”””பா ”””   எல்லொரும் எதிர்பார்ப்பது போல் இது ஹாலிவுட்டில் இருந்து திருடபட்ட கதை அல்ல, நம்மை சுற்றி நிகழும் நிகழ்வை படம் பிடித்து தர முயன்றிருகின்றார்கள்.
கதை வெளியானதற்கும் தமிழ் பிரஸ் இன்போவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இதற்காக தமிழ் பிரஸ் இன்போ மும்பை பொருப்பேற்காது என்றும் இது பிளாக்கர்ஸ் சட்டவிதிப்படி பதிக்கபட்டது என்பதையும் இங்கு தெரிவித்து கொள்கிறோம்
தமிழ் பிரஸ் இன்போ-மும்பை
02225463659


                     சிறுவயதில் நாம் நம்முடன் பள்ளிக்கூடங்களில் படிக்கும் சில ஊனமுற்ற சிறுவர்களை கண்டிருக்கிறோம் ஆனால் இவற்றில் சில ஊனங்கள் வித்தியாசமானவைகளாக இருக்கும். ஆம் நன்றாக பார்ப்பதற்கு தோற்றமளிப்பார் ஆனால் கடுமையான மன நோயாளியாக இருப்பார். குருடு, செவிடு, முடம் போன்றவற்றை விட வித்தியாசமான ஊனமுற்றோர்களை நாம் பார்த்திருக்கிறோம்.
                   
                     அதில் உள்ள ஒற்றுமை என்ன வென்றால் இந்த வித்தியாசமான வர்கள் அனைவரும் பெரிய பிரபல் வழக்கறிஞர்கள், போலீஸ் அதிகாரிகள், மற்றும் அதிகார பலம் வாய்ந்த அதிகாரிகளின்  குழந்தைகளாக இருப்பதுதான். நம்முல் பலர் சொல்ல கேட்டு இருக்கிறோம் எத்தனை பேரின் வாயில் விழுந்தானோ அதுதான் அந்த சாபம் தான் இப்படி குழந்தையாக பிறந்து இருக்கிறது என்பார்கள்.
                     கதை இந்த வரியை மையமாக வைத்துதான் நகர்கிறது. நகரின் சுமாரான பிரபலமான ஒருவர் சில வருடங்களிலெயே பெரும் பணக்காராக மாறிவிடுகிறார். பிறகு அரசியலில் நுழைய அவருக்கு செல்வம் நான்கு புறம் இருந்தும் கொட்ட ஆரம்பிக்கிறது. வாழ்க்கை மகிழ்ச்சி என்னும் கடலில் ஆனந்தமாக போய்க்கொண்டு இருக்கும் போது ஆனந்ததிற்கே மகுடம் சூட்டும் சம்பவம் போல் பிரபலத்தின் மனைவி கருத்தரிக்கிறாள். 10 மாதமும் சந்தொசம் வெட்கம் பூரிப்பு என சென்று கொண்டிருந்த நாட்கள் ஆண்குழந்தை ஒன்றை பெற்றெடுக்கும் வரை நீடிக்கிறது. குழந்தை பிற குழந்தைகளைவிட பிறக்கும் போதே வயதான தோற்றத்தில் பிறந்து விடுகிறது. வீட்டில் அன்றில் இருந்து நிம்மதி இழந்து தவிக்கின்றனர். அபிசேக் குழந்தையின் தந்தையாக நடித்து இருக்கிறார். அமிதாப் பச்சன் 13 வயது பொரோகிரியாவால் பாதிக்கபட்ட குழந்தையாக நடித்து இருக்கிறார்.
                            பரேஸ் ராவல் அபிசேக்கின் உதவியாளர் இவர் மூலம் குழந்தையை எங்கேயாவது போட்டு விட்டு வாருங்கள் என்று கூறுகிறார். ஆனால் குழந்தையின் அன்னை வித்யா பாலன் குழந்தையை இறுதிவரை வளர்க்க உறுதிபூண்டு குழந்தையின் எதிர்காலத்திற்காக தனது வாழ்க்கையை மாற்றி அமைக்கிறார். இறுதியில்ம் அபிசேக்கும் மனம் திருந்தி குழந்தையின் எதிர்காலத்திற்காக இருவருமாக சேர்ந்து மருத்துவம், மற்றும் இது போன்ற நோயால் பாதிக்கபட்ட குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பாடுபடுகின்றனர்.
இசை இளையராஜா இவரது இசையில்(சீனி கம்) லயித்த அமிதாப் அப்”””பா””” வில் நீங்கள் தான் இசை அமைக்கவேண்டும் என்று கேட்டுகொண்டதற்கு இனங்க சிறப்பாக இசை அமைத்துள்ளார்.



6 நவ., 2009

சூடு போட்ட பிறகு சுறுசுறுப்பான மும்பை போலீசார்

                                    மும்பை போலீஸ் தாராவி சிறுவனின் விசயத்தில் மட்டும் தாமதமாக ந்டவடிக்கை எடுத்தது என்று நினைக்க வேண்டாம், வருடக்கணக்கில் காணாமல்போன குழந்தையை மும்பை உயர் நீதி மன்றத்தின் திட்டு கிடைத்த உடன் 6 நாட்களுக்குள் கண்டுபிடித்து கொடுத்த தமாஸும் நடந்து இருக்கிறது.


                                மும்பை புறநகர் உல்லாஸ் நகரில் வசித்து வருபவர் பிரிதி சூக், 26 இவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றும் 5 வயது ஆண்குழந்தையுடன் வசித்து வருகிறார். கடந்த வருடம் குழந்தையை பார்கவேண்டும் மும்பை ஹாஜி அலில் பார்க்கிற்கு வா என்று அவரது  முன்னாள் கணவர் கூறியவுடன், கோர்ட்டின் உத்தரவின் படியும் குழந்தையை அழைத்து சென்றார். ஹாஜி அலி பார்க்கில் குழந்தையுடன் சிறிது நேரம்  பேசிக்கொண்டு இருப்பது போல் இருந்த அவரது முன்னாள் கணவர் திடிரென குழந்தையை தூக்கி கொண்டு காரில் சென்றுவிட்டார். சில விநாடிகளில் நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பிரிதி மஹாலட்சுமி போலீஸில் புகார் செய்தார், போலீசார் அந்த புகாரை பெற்றுகொள்ள மறுத்து கொஞ்ச நாள் குழந்தை அவரது அப்பாவிடமும் இருக்கட்டுமே என்று சமாதானம் பேச முயன்றனர்.










                          இதனை அடுத்து உல்லாஸ்நகர் போலீஸில் புகார் செய்தார். உல்லாஸ்நகர் போலீசார் முதலில் புகாரை ஏற்க மறுத்து சமாதானம் பேச முயன்றனர். ஆனால் பிரிதி தன் நிலையில் பிடிவாதமாக இருந்ததால், குழந்தை காணாமல் போனதாக எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். அதன் பிறகு தான் பிரச்சனை தொடங்கியது. கணவரும் அவர்களது உறவினர்களும் போனிலும் நேரிலும் மிரட்ட துவங்கினர். பிரிதி பல முறை இது குறித்து புகார் கூறியும் பலனில்லை. போலீசார் குழந்தை வெளிநாடு சென்று விட்டது என்றுவேறு சப்பை காரணம் சொல்லி இருக்கிறது. இந்த சம்பவத்தால் போலீசாரின் மீது நம்பிக்கை இழந்து மும்பை உயர் நீதி மன்றத்தை அனுகினார். பிரிதியின் புகாரை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் போலீஸ் உயரதிகாரியை நேராக கோர்ட்டிற்கு வரவழைத்து 11 மாதங்களாக குழந்தையை கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் குழந்தையின் தாயிடம் எங்களால் குழந்தையை கண்டுபிடிக்க முடியாது மன்னித்து விடுங்கள் என்று எழுதி கொடுக்க வேண்டியதுதானே என்று காட்டமாக உத்தரவிட சூடு வாங்கி கொண்ட போலீஸ் அடுத்த 7 வது நாளே குழந்தையை கண்டு பிடித்து கோர்ட்டின் மூலம் தாயாரிடம் ஒப்படைத்து.


PIC-மராட்டிய மாநில தலைமை காவல்த்துறை அதிகாரி எ என் ராய், மும்பை காவல்துறை ஆனையர் டி சிவானந்தம்

சனிக்கிழமை நல்ல முக்கூர்த்தம் இழுபறி முடிவிற்கு வந்தது





            முழுமையான வெற்றி யாரிடமும் ஆதரவு கொடு என்று தொங்கவேண்டிய அவசியம் இல்லை, ஒன்றாக இனைந்து 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த கூட்டனி ஆனால் மந்திரி பதவிகளில் இந்த முறை நீயா நானா, ஆரம்பித்து வைத்தவர் வேறு யாரும் அல்ல மாநில முதல் மந்திரி, டில்லியில் அசோக்சவான் மராட்டிய மாநில முதல் மந்திரி என அறிவிக்கபட்டது, அவர் பத்திரிக்கையாளர்களிடன் கொடுத்த பேட்டியில் ” இம்முறை நாங் கள் அதிக இடத்தில் வெற்றி பெற்றுவிட்டோம், அதனால் எங்களுக்கு உள்த்துறை மற்றும் சில முக்கியமான மந்திரி பதவிகளை எடுத்துகொள்வோம் என ஸ்டேட்மெண்ட் விட விடயம் சூடு பிடித்து, டில்லியில் கொடுத்த இந்த பேட்டியின் எதிர்வினை மும்பையில் துணைமுதல் மந்திரி தேர்தெடுக்கும் போது தெரிந்தது, உள்த்துறை தேசியவாத காங்கிரஸ் 10 வருடங்களாக தன்னிடம் வைத்துள்ளது. இரண்டு முறை காங்கிரசை விட அதிக இடம் கிடைத்தும் முதல் மந்திரி பதவியை விட்டு கொடுத்த தேசிய வாத காங்கிரஸ் முதல் மந்திரியின் இந்த பேச்சால் கோபமுற்றது, விளைவு 15 நாட்களாக இன்னும் ஆட்சியில் அமர முடியவில்லை. காங்கிரஸ் தேசியவாத காங்கிரசின் குடுமி பிடி சண்டையில் தோல்வியில் துவண்டு இருந்து ஜய ஜய கோஷ்டிகளும்(காவிகளுக்கு) உற்சாகத்தை அளித்துவிட்டது. தங்களுடைய கடமையை லேட்டாக புரிந்து கொண்ட காவிகள்(சிவசேனா-பாரதிய ஜனதா) நேற்று மாநில கவர்னர் எஸ்.சி சமீரை சந்தித்து மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும் என்று முறையிட்டது. இது எதிர்கட்சிகளின் கடமையும் கூட் எதிர்கட்சிகளின் கோரிக்கையை பரிசீலித்த கவர்னர் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் இரண்டிற்கும் 48 மணிநேர கெடு கொடுத்து அதற்கு ஆட்சி அமைக்க முன்வராவிட்டால் சட்ட ரீதியாக அனுகப்படும் என்று அறிக்கை விடுத்ததும். இரண்டு கட்சிகளும் தாமதமாக உணர்ந்து கொண்டது இரண்டு கட்சிகளும் இன்னும் தங்களுக்குள் சமாதானமாகவில்லை இருப்பினும் நிலமை கைமீறி செல்கிறது. பிரபுல் பாட்டீல் நாங்கள் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் என்று அறிக்கைவிட்டார். 1999 பார்முலாவே பின்பற்றபடும் என்று அறிக்கைவிட்டார்.  சனிக்கிழமை காலை 11 மணி அளவில் விதான் பவனில் பதவி ஏற்புவிழா நடைபெறும் என்று தெரிகிறது. இந்த நிலையில் டில்லியில் இன்னும் விவாதம் முடிவடைந்ததாக தெரியவில்லை பிரபா ராவ், விலாஸ்ராவ் தேஷ்முக், நாராயன் ரானே மற்றும் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோருடன்  சோனியா காந்தி ஏ கே அண்டோனி ஆலோசனை நடத்தினார். தேசிய வாத காங்கிரசார் பிடிவாதத்தை குறைப்பதாக தெரியவில்லை நிலமை மீறி போவதை கண்ட சோனியா தேசியவாத காங்கிரசார் கேட்கும் மந்திரி பதவியில் இரண்டை விட்டு கொடுத்து இருக்கிறார். நகர்புற மற்றும் கிராம வளர்ச்சித்துறை, மற்றும் நெடுஞ்சாலைத்துறை போன்றவைகள் தேசியவாத காங்கிரசிடமே இருக்கபோகிறது. உள்ததுறை மட்டும் காங்கிரசார் வசம் இருக்கபோவதாக தெரிகிறது, நேற்று மும்பை வந்த அசோக்சவானும் இதை உறுதி படுத்தியது போல் தெரிகிறது, இந்த நிலையில் காங்கிரசில் மந்திரி பதவிக்கு காத்திருந்த சிலரை சமாதான படுத்த வேண்டி இருப்பதால் காங்கிரஸ் மந்திரிகள் இரண்டு பாகமாக பங்கேற்பார்கள் என்றும் தேசியவாத காங்கிரசார் ஒரே நேரத்தில் பதவி ஏற்பார்கள் என்றும் தகவல் வருகிறது. இன்று(வ்ள்ளி)மாலை  5 மணி அளவில் அசோக்சவான் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க கடிதம் வழங்குவார். இருந்த போது டில்லி நிலமை இன்னும்  சீராகவில்லை என்றே தெரிகிறது. வரும் நாட்களில் தேசிய வாதகாங்கிரசிற்குள்ளும் காங்கிரஸிற்குள்ளும் புகைச்சல் வரும் என்றே தெரிகிறது.

BEST ALWAYS BEST


               மும்பை மாநகரின் உயிரோட்டத்திற்கு புறநகர் ரெயில் மற்றும் உள்ளூர் பேருந்து இரண்டும் முக்கிய காரணியாக அமைகின்றன. மும்பை மாநகர பேருந்து நிர்வாகம் மும்பை மாநகராட்சியின் கீழ் இயங்மும் மும்பை மாநகர் மின்சார விநியோகம் மற்றும் போக்குவரத்து கழகமாகும். (இதை தான் சுறுக்கமாக Bombay electric sublay and transport) BEST  இதன் வருடாந்திர பட்ஜெட் உலகின் முக்கிய பேருந்து கழக பட்ஜெட்டுகளில் ஒன்றாகும். சுமார் 100 கோடிபெருமான பட்ஜெட் அமுலாக்கும் நிறுவனமான பெஸ்ட் 2010 ஆண்டிற்கான பட்ஜெட்டை நெற்று வெளியிட்டது. பேரூந்து கட்டண உயர்வு இல்லை, இது இந்த பட்ஜெட்டின் ஹைலைட்டாகும், மேலும் மும்பை தூரப்புறநகரான தகிசரில் இருந்து சர்ச் கேட்வரை எக்ஸ்பிரஸ் பஸ் அறிமுக படுத்தி இருக்கிறது. அடிக்கடி நடக்கும் ரெயில் விபத்து மற்றும் தீவிரவாத தாக்குதல் போன்ற காரணங்களால் பெஸ்ட் பஸ்ஸிற்கு சுமார் 8 புதிய பயணிகள் கிடைத்து இருக்கின்றனர். கடந்த வருடம் மட்டும் 60க்கும் மேற்பட்ட புதிய வழித்தடங்கள் விடப்பட்டு இருக்கின்றன. 80 கோடிக்கான பட்ஜெட் அறிக்கையை வெளியிட்டு பேசிய பெஸ்ட் கமிசனர் கோபர்கடே பெஸ்ட் பஸ்களின் தரம் மற்றும் சேவையால் பயணிகளின் வரத்து அதிகமாகி இருக்கிறது. 2005-ற் முன்பு இருந்த மந்தமான நிலை மாறி கடந்த 3 வருடமாக பெஸ்ட் லாபகரமாக மாறிவுள்ளது இதன் காரனமாக பயணிகளுக்கு பல வசதிகள் செய்து கொடுத்து இருக்கிறோம். மோனோ ரயில் மற்றும், மெட்ரோ ரெயில் வந்தால்  பெஸ்ட் சேவை பாதிக்கபடுமா என்ற கேள்விக்கு “ மோனோ ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் சேவை துவங்கினால் அதன் ஆரம்ப இடத்தில் இருந்து பல பேருந்துகள் விடவும் எங்களிடம் திட்டம் இருக்கிறது. இதன் மூலம் இரண்டு நிறுவனங்களுமே நல்ல பயன்பெறும் என்றார். மேலும் பெஸ்ட் பஸ்களுக்கான சிறப்பு வழித்தடம் நெடுங்சாலைகளில் அமைக்கப்படுவது குறித்து அவர் பேசுகையில் இதன் மூலம் தூரித சேவை, டிராபிக்கில் சிக்காமல் செல்வது, மற்றும் விபத்து போன்றவற்றை தவிர்க்க முடியும், என்றார்.
கனடாவில் உள்ளது போல் நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய பேருந்து அடுத்த வருடத்தில் இருந்து விடப்படும் என்றும் குறைந்த தூரம் செல்லக்கூடிய இந்த பேரூந்து விரைவில் சோதனை ஓட்டம் விடப்டும் என்றும் இந்த பேரூந்தை தனியார் நிர்வாகிப்பார்கள் என்றும் கூறினார். நகரில் பல இடங்களில் மின்சாரம் திருட்டு அதிகரித்து இருப்பதாகவும் இதை கட்டுபடுத்த மூன்று சிறப்பு குழுக்கள் அமைக்கபடும் என்று கூறினார்.
கடந்த 4 வருடமாக பெஸ்ட் பேருந்துகளில் விலை ஏற்றபடவில்லை என்பதும் இங்கே குறிப்பிடதக்கது.
மேலதிக தகவலுக்கு பெஸ்ட்டின் இணையதளத்தை பார்வையிடவும் http://www.bestundertaking.com







தமிழ் பிரஸ் இன்போ கார்பரேட் விங்
TPI-Mumbai 
09029512535    

5 நவ., 2009

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்



 கடந்த வாரம் மும்பை தாராவியில் தமிழ் சிறுவன் அந்த பகுதியில் வாழும் இளைஞர் ஒருவரால் பாலியல் வண்முறைக்கு உள்ளானது அனைவருக்கும் தெரிந்ததே, காலை 10 30 மணி அளவில் அந்த சிறுவனின் பெற்றோர்கள் தாராவி போலீசில் புகார் கூறி உள்ளனர். முதலில் எப் ஐ ஆர் கூட பதிவு செய்யாமல் குற்றமிழைத்த இளைஞனை அழைத்துவந்து பேச்சுக்கு மிரட்டி விட்டு லாக்கப்பில் கூட வைக்காமல் அங்கிருந்த அமர் பலகையில் அமரவைத்துவிட்டு அதிகாரி வரம்பில் உள்ள ஒருவர் ரவுண்டிற்கு சென்றுவிட்டார். அந்த பகுதியில் உள்ள சில பெரித தலைகள் வந்து காவலர்களிடம் கொடுக்கால் வாங்கல் செய்ய சிறுவனின் பெற்றோரை அழைத்து சமாதானம் பேசி இருக்கிறார்கள். சிறுவனின் அன்னையின் சகோதரர் அந்த பகுதியில் உள்ள தமிழ் பெரிய மனிதர்களிடம் செல்ல (தேர்தல் தான் முடிந்து விட்டதே) நான் அந்த வேலையில் பிசி, எனக்குதெரிந்த போலீஸ் ஆபீசர் ஊரில் இல்லை என்று மழுப்பலான பதில் சொல்லி நழுவிட்டனர். மாலை 3 மணிவரை எப் ஐ ஆர் பதியவே இல்லை, முதல் மந்திரி பிறந்தநாள் விழாவிற்கு சென்று கொண்டிருந்த எனக்கு திரு செந்தில் போன் செய்தார். இப்படி பிரச்சனை சரவணா போலீசார் எப் ஐ ஆர் பதிவு செய்யாமல் சமாதானமாக போக சொல்கிறார்கள் நேரம் ஆக ஆக மிரட்டவும் செய்கிறார்கள், குற்றவாளியை இன்னும் விசாரிக்க கூட இல்லை, என்றார்.

                       முதலில் எனக்கு தெரிந்த கிரைம் பத்திரிக்கையாளர்களிடம் இது குறித்து பேசினேன். பிரபல மாலை பத்திரிக்கை ஒன்று நேரடியாக தாராவி போலீஸ் ஸ்டேசனில் பேச செய்தி எப்படி பத்திரிக்கை நிருபர்களுக்கு சென்றது என்று மீண்டும் மிரட்டல் விட நேரம் இரவு 9 ஆகிவிட்டது அப்பொழுது கூட எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் இருக்கவும், மேலிடத்தில் சொல்வதை தவிர வேறுவழியில்லாமல் போய் விட்டது.

                 மேலிடத்தில் இருந்து இது குறித்து கேட்டவுடன் இரவு காவல் உயரதிகாரி குற்றவாளி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார். அதாவது புகார் கூறிய 18 மணிநேரம் கழித்து,,,,,,,, மறுநாள் மும்பையில் உள்ள அத்தனை பத்திரிக்கையிலும் இந்தி, ஆங்கிலம், மராட்டி,குஜராத்தி) . சிறுவனுக்கு நடந்த கொடுமைபற்றி செய்திகள் வர தாராவி காவல் நிலையம் தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டது,  இரவு முழுவதும் ஏன் சிறுவனையும் அவரது தந்தையையும் காவல் நிலையத்தில்வைத்திருந்தீர்கள் என்று கேட்டதற்கு பகலில் உள்ள அதிகாரி பதில் சொல்வார் என்று சொல்லிவிட்டார்.
             
                         காலையில் முக்கிய டெலிவிசன் சேனல்கள் தாராவி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட பையனிடம் நேரடியாக பேட்டி அளிக்க கூடாது என்று நினைப்பில் தாராவி போலீசார் சிறுவனை நாக்பாடா போலீஸ் மருத்துவமனைக்கு சிறுவனை பரிசோதனைக்கு கொண்டு சென்று விட்டார்கள். இறுதியாக குற்றவாளி நவம்பர் 2 தேதிவரை போலீஸ் காவலில் அடைக்கபட்டார்.குற்றவாளி இந்த மாநிலத்தை  சேர்ந்தவர் என்பதால் போலீசார் கொஞ்சம் தளர்வாகவே இருந்தனர். தற்போது குற்றவாளி போலீஸ் ரிமாண்ட் முடிந்து டோம்பிவிலி சிறையில் அடைக்கபட்டுள்ளார். அந்த பகுதியில் உள்ள சில சமூக சேவை நிறுவனங்கள் பாதிக்கபட்ட சிறுவனின் பெற்றோர்களிடன் சமாதானம் பேச முயன்றனர்.

குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுக்கவேண்டும் என்ற நோக்கமல்ல இனி மேலும் யாரும் தமிழர் மீது கைவைக்க சிந்திக்க வேண்டும் என்பதும் இனிமேலும் இது போன்ற குற்றங்களை செய்யும் முன்பு குற்றவாளி சட்டத்தின் மீது பயப்படவேண்டும் என்பதே எமது நோக்கம்.

சிறுவன் சிறிது பயந்தது போல் காணப்படுகிறான்,
சிறுவனின் பெற்றோர்கள் 3 நாட்கள் மும்பை சயான் மருத்துவமனையில் வைத்திருந்தார்கள். இதனால் நஷ்ட ஈடு கேட்கலாம் என்று தெரிந்த வழக்கறிஞர்களிடன் ஆலோசனை கேட்டு இருக்கிறேன்.

செய்தி ஒலிபரப்பான சேனல் கள்
Zee TV, AJ Tak, E Tv (marathi) Star News, News 24, Zee 24 thaas (Marathi)



21-year-old school dropout held for sodomising boy in Matunga

Thursday, October 29, 2009 2:19 IST


Mumbai: Officers of the Shahu Nagar police station have arrested a 21-year-old school dropout on Wednesday for allegedly sodomising a six-year-old boy at Matunga Labour Camp.
click here

Senthil Kumar, 32, the victim's uncle, said, "My nephew is a Std I student in a Bandra school. On October 26, he told his mother [Kavita] that he wanted to reveal something important if she did not scold or beat him. After his mother assured him, the boy revealed that their neighbour Nikesh Balid took him to his home in the afternoon four days ago on the pretext of playing games and sodomised him," said Kumar.

The victim's parents then lodged a complaint with the Shahu Nagar police against Nikesh on Tuesday, said Kumar. "We have arrested Balid on Tuesday. He was booked under sections 377 (unnatural offences) and 504 (intentional insult with intent to provoke breach of the peace) of the IPC," said senior inspector Waman Ghadigaonkar.

Incidentally, when the victim's father Kalidas went to the police station along with the boy to lodge complaint around 11.30 am on Tuesday, they were asked to sit at the police station throughout the day and also spent entire night in the police station. On Wednesday morning, the victim was sent to Nagpada police hospital for medical check-up.

Senior inspector Ghadigaonkar refused to comment on the matter.