26 நவ., 2009

வெட்கம் கெட்ட உலகம்

 

  மும்பை தாக்குதல் நேரடி அனுபவத்தால் வெதனையின் உச்சத்தில் இருந்து இருக்கிறேன்,

 மும்பை மாநகராட்சி இரண்டு நாட்கள் கழித்து பிரதமர் வருகிறார் அதற்கு சிறப்பு அனுமதி வாங்கவேண்டும் என்ற நினைப்பில் மாநகராட்சி பத்திரிக்கையாளர் சங்கத்தில் அமர்ந்திருந்த போது திடிரென விளக்குகள் அனைத்தும் அனைக்கபட்டு விட்டது. நாங்கள் அமர்ந்திருக்கு இடம் உள்பகுதியில் அமந்திருந்ததால் வெளியில் நடப்பது எதுவும் தெரியாது. இருட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் மொபைல் வெளிச்சத்தில் கதவை திறந்த போது பாதுகாவலர்கள் யாரும் வெளியே செல்லவேண்டாம் என்றும், சி எஸ் டி யில் இருவர் துப்பாக்கியால் சுடுகிறார்கள்
என்றும் கூவினர். வளாகத்தில் வரும் போது லெசாக சத்தம் கேட்டது. அனைவர் முகத்திலும் பயத்தின் ரேகை தெரிந்ததுயு
வெகுநேரம் கழித்து போலீஸ் சைரன் சத்தம் எல்லாம் குறைந்த பிறகு சரியாக 10:40 கீ ழே வந்தால் சி.எஸ்.டியில் ரத்தகளரி
யாரையும் உள்ளே நுழையவிடவில்லை, பல அதிகாரிகள் இறந்தாகவும் தகவல் ஆனால் தூரத்தில் இருந்து பார்த்தேன்
இரத்தால் உரைந்த உடலங்கள்,

  தாக்குதல் நடந்த ஓட்டல் நிர்வாகம் சில்பா செட்டியில் திருமன அழைப்பிதழை விட அதிக செலவில் அழைப்பிதழ் அடித்து கொண்டாடுகிறது. இரண்டு ஓட்டல் நிர்வாகமும் இலவச விளம்பரம் தேடுவதற்கு உலகில் உள்ள அனைத்து பத்திரிகைகளுக்கும் தகவல் தருகிறது.
டி.வி க்களோ திரைக்கதை வசனம் எழுதி வினாடிக்கு வினாடி மொபைல் போன்கள், அழகு சாமான்கள், வாகனங்கள் போன்ற விளம்பரங்களை பாதியாக போட்டு பாதியில் மும்பை நிகழ்வு, எல்லாவற்றையும் மிஞ்சும் அளவிற்கு ஐடியா
செய்தது இன்று இரவு ஐடியா மொபைலில் பேசப்படும் பொழுது அதில் வரும் பணமெல்லாம் பாரதிய போலீஸ் போர்ஸிற்கு செல்லுமாம் ( அப்படி ஒரு போர்ஸ் இருக்கிறதா????)
  பிரதம மந்திரியோ மும்பைதாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு தண்டனை தந்தே தீரூவோம் என்கிறார்.
முதலில் நாட்டின் பொருளாதோரத்தோடு விளையாடிய மதுகோடா, ராஜா, போன்றவர்களை தண்டியுங்கள், மும்பையை இனி நாங்களே பாதுகாத்துகொள்கிறோம்,

வெட்கம் கெட்ட மனிதர்கள்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக