4 நவ., 2009

விடியாத இரவுகள்












செவ்வாய் 3/11   காலை மிகவும் பரபரப்பாக துவங்கியது. டில்லியில் சோனியா சரத்பவார் இடையே நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து விட்டதாகவும், இன்று  மாலைக்குள் அசோக்சவான், மற்றும் சஜன் புஜ்பால் முதலில் பதவி ஏற்பார்கள் பிறகு மற்றவர்கள் ஏற்பார்கள் என்றே யாரோ பி டி ஐ க்கு போட்டு கொடுக்க அதன் காரணமாக இரவில் செய்தி அனைத்து பத்திரிக்கைகளிலும் அச்சேறியது இது குறித்து டில்லியில் இருந்த அசோக் சவானிடம் கேட்டபோது எப்போழுதும் போல் மேலிடம் என்று சொல்லி போனை வைத்துவிட்டார். அவரது உற்சாகமற்ற பதிலே சொல்லிவிட்டது இன்னும் பிரச்சனைகள் தீரவில்லை என்று இருப்பினும் டில்லி மும்பை இரண்டுமே பரபரப்பில் இருந்தது. காலை முதலே விமான போக்குவரத்து துறை காபினெட் மந்திரியும் தேசியவாத காங்கிரஸ் கட்சி மராட்டிய மாநில பொருட்பாளருமான பிரபுல் பாய்படேல் வீட்டில் பரபரப்பு தொற்றிகொண்டது.
டில்லியில் அவரது வீட்டின் முன்பு மீடியாக்கள் கூட்டம் அதிகமாகிவிட்டது. இன்று சட்டமன்ற கூட்டத்தொடரின் முடிவு நாள் இன்று புதிய உறுப்பினர்கள் பதவி யேற்று புதிய கூட்டதொடருக்கான அட்டவனை தயாரிக்க வேண்டும் ஆனால் காங்கிரசும் தேசிய வாத காங்கிரசும் இன்னும்  தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டு இருக்கிறது. சரியாக11 மணிக்கு வெளியே வந்த படேல் துணைமுதல் மந்திரியாக சஜன் புஜ்பால் இன்று பதவி ஏற்கமாட்டார். அதே நேரத்தில் அசோக் சவான் முதல் மந்திரி பதவி ஏற்கும் போது நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளிப்போம் என்றுகூறிவிட்டு சென்றுவிட்டார்.
டில்லியில் உள்ள மராட்டிய சதனில் கொஞ்சம் டென்சனுடனேயே முதல் மந்திரி அசோக்சவான் காணபட்டார். சாயிபாபா ரெயிட் அன்னை போட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன் உடனே மும்பை கிளம்பிவிட்டார். 

         இதில் ஒற்றுமை என்ன வென்றால் பாரத திருநாட்டின் அனைத்து பெரிய கட்சிகளின் அலுவலகங்களுமே நேற்று பரபரப்பாக காணப்பட்டது. கர்நாடகாவில் பதவி எனக்கு என ரெட்டி பிரதர்ஸ் மல்லுகட்டுகிறார்களாம், அதனால் பஞ்சாயத்து பாரதிய ஜனதா தலைமை அலுவலகத்தில், மாவோயிஸ்டுகளால் பிரச்சனை என்றால் எகஸ்ரா தலைவலி போல் மம்தா குடைச்சல் அதனால் சிவப்பு தோழர்கள் தலைமை அலுவலகத்திலும் பரபரப்பு,
சரத பவாரிடம் சோனியா சொன்னதாக சில பாயிண்டுகள் கசிந்தன.
1 உளதுறை எங்களுக்குதான் அதில் நாங்கள் விட்டு கொடுக்கமாட்டோம், அதற்கு பதிலாக வருமான வரித்துறை எடுத்துகொள்ளுங்கள்(நாராயன் ரானே ராமராஜன் லெவலுக்கு போய்ட்டார் பாவம்)
2, பில்டர் மூலமாக வருமானம் வரும் எந்த ஒரு துறையும் தயவு செய்து கேட்டு விட்டாதீர்கள்,தேர்தலில் அதிகம் செலவழித்து விட்டீர்கள் அது எங்களுக்கும் தெரியும் ஆனால் நாங்கள் தேசிய கட்சி புரிந்து கொள்ளூங்கள்,

சரத்பவாரின் பதில்: நோ மேடம் தயவு செய்து எங்களுக்கு மேலே சொன்ன இரண்டும் வேண்டும் இல்லை என்றால் நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்போம்,

சோனியா: இன்று கடைசி நாள் இன்று கவர்னரிடம் கடிதம் தரவேண்டும் பிடிவாதம் பிடிக்காதீர்கள்,

சரத்பவார்: கடந்த முறை நாங்கள் அதிக எம் எல் ஏ வைத்திருந்தும் உங்களுக்கு முதல் மந்திரி பதவி கொடுத்தோம் இந்த முறை எங்களுக்காக நீங்கள் விட்டு கொடுங்கள் என்றார்.

ஆனால் விலாஸ் ராவ், சுஷில் குமார் ஷிண்டே, போன்ற மராட்டிய தலைவர்கள் சோனியாவிடம் மேடம் அவர்கள்

வழிக்கு வருவார்கள் அதனால் நமது பிடியை தளரவிடவேண்டாம் என்று சொல்லிவிட மேடம் சரி நாளைக்கு போசலாம் என்று எந்த ஒரு முடிவும் சொல்லாமல் சோனிய உடனே சென்று விட்டார்.

மும்பை:
ஓட்டு போட்ட மக்கள் எதுவுமே அறியாமல் அவர்கள் அவர்கள் வேலையை பார்த்து கொண்டு பரபரப்பாக எப்போழுதும் போல் ஓடிக்கொண்டு இருந்தனர். மீடியாக்கள் காலையில் இருந்தே காந்தி பவர், தேசிய வாத காங்கிரஸ் அலுவலகம், போன் செய்த வாறு இருந்தது. இன்று எப்படியாவது முதல் மந்திரி துணை மந்திரி பதவி யேற்றுவிடுவார்களா? என்ற கேள்வி மட்டும் தான் அனைவரிடத்திலும்அசோக் சவான் சாமானியத்தில் போனில் வரவில்லை, அவரது இரண்டு உதவியாளர்களுமே சாப் டில்லி துன் போல்தோஸ் ஆகே(சார் டில்லி வலாக்களுடம் பேசிகொண்டு இருக்கிறார்)
மாணிக்ராவ் தாக்கூர் போனை எடுத்தவுடன் எங்க தரப்பில் நோ ரெட் சிக்னல் என்றார்ஆர் ஆர் பாட்டில் தன்னுடைய பாணியில் நிதானமாக பதில் கூறினார், மாலை வரை காத்திருங்கள் (இவர் நாளை வெளிவரும் பேப்பர் செய்தி கொடுப்பார்)
அசோக் சவான் மற்றும் சஜன் புஜ்பாலை கவர்னர் ஆலோசனைக்கு அழைக்க கிடைத்த வண்டியில் தொத்தி கொண்டு எல்லோரும் (மீடியாஸ்) மலபார் ஹில் கவர்னர் அலுவலகம் செல்ல அங்கு அசோக் சவான் ஏற்கனவே உள்ளே சென்று இருந்தால் பல மீடியாங்கள் அங்கும் குழுமி இருந்தனர். சுமார் 20 நிமிடம் கழித்து வெளியே வந்தவரிடம் கேள்வி கேட்ட போது விரைவில் நாங்கள் ஆட்சி அமைப்போம், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கவர்னர் கேட்டறிந்தார் என்றார் இதைவிட வேறு ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டு வேறு எந்த கேள்விக்கும் பதில் நஹி.









அசோக் சவான் சென்ற் சில நிமிடங்களில் சஜன் புஜ்பால் புன்னகையுடன் கவர்னர் மாளிகையில் சென்றவர் பவுன்ஸ் ஆன டென்னீஸ் பந்து போல் புன்னகை மாராமல் வெளியே வந்தார். அவரிடம் கேள்வி கேட்டமுற்பட்ட போது ராம் டேக் வரசொல்லி அவரது உதவியாளர் சொல்லிவிட்டு சிவப்பு பலுப்பு போட்ட காரில் பறந்துவிட்டார்.
ராம் டேக் உணவு இடைவேளைக்கு பிறகு அரசியல் சூறாவளி மையம் கொண்ட துணைமுதல் மந்திரியின் அரசு வீடுஅனைவருக்கும் சமோசா டீ பரிமாறிகொண்டு இருந்தனர். எப்போதும் போல் எல்லோருடனும் பேசிக்கொண்டு அடிக்கடி டில்லியில் இருந்து வரும் போனில் பேசிக்கொண்டும் இருந்தார். இது அவரது வழக்கமான ஸ்டைல் தனியாக வீட்டில் இருந்து விட்டு மீடியாக்களை மணிநேரம் காக்கவைக்க மாட்டார். எல்லோருடனும் கலகலப்பாக பேசிக்கொண்டு நலன் விசாரித்துகொண்டு நிருபர்களிடம் இருக்கும் டென்ஸனை குறைப்பதில் கில்லாடி,
சிறிது நேரத்தில் எல்லோரையுன் கூப்பிட்டு நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு தர தயாராகி விட்டோம் என்று தடாலடியாக குண்டு போட்டார்.

பிரச்சனை இன்னும் மிகவும் மோசமாகிவிட்டது என்று தெரிந்து விட்டது.
காங்கிரஸ் கட்சி அலுவலகம காந்திபவன் 


மாணிக்ராவ் தாக்கூர் நிதானமாக பேசினார் எங்கள் தரப்பில் எந்த ஒரு தடையும் இல்லை, டில்லியில் பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்றார்.நாளையாவது ஆட்சி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு கவர்னரிடம் பேசி இருக்கிறோம் என்ற சொதப்பலாக பதில்சொல்லி விட்டு சென்று விட்டார். இன்றைய சூரியனும் மராட்டிய அரசியல் பற்றி மரைன் டிரைவில் டி வி மீடியாக்கள் ஏதும் பேசுவார்கள் அதை கேட்டு விட்டு நிம்மதியாக தூங்கலாம் என்று மேகத்தை எல்லாம் விலக்கி விட்டு காத்திருந்தான் பாவம் ஏமாற்றத்துடன் தூங்க சென்று விட்டான். எப்படியும் இந்த வாரத்திற்குள் ஆட்டம் முடிவிற்கு வந்து விடும் என்று தெரிகிறது.

ராஜ் தாக்கரே ஏதோ பரபரப்பு ஏற்படுத்தில் ஒருவாரம் பேப்பரில் ஸ்டேட் மெண்ட் விடலாம் என்று நினைத்தார் ஆனால் காங்கிரஸ் தேசிய வாத காங்கிரஸ் கட்சிகளின் லடாயின் முன்பு இவரது மராட்டி ஸ்பீக்கிங் ஸ்டேட்மெண்ட் புஸ்வானமாக போனதால் மீண்டும் பாந்திராவில் ஏதோ பேசினார்.
சிவசேனா பாரதிய சனதா சுறுசுறுப்பு அடைந்து விட்டது. 3 வருடங்களுக்கு பிறகு சிவாலயம்(சிவசேனா தலைமை அலுவலகத்திற்கு) பாலாசாகிப் தாக்கரே ஜி வருகை தந்தார். புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு பேசிக்கொண்டு இருந்தார். இனி களத்தில் இறங்க வேண்டியது தான் என்ற முடிவிற்கு வந்துவிட்டார் போலும் புலி குகையை விட்டு வெளியே வந்துவிட்டது. இனி களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிடும்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக