7 நவ., 2009

பா எல்லாம் இருந்தும் தவமிருந்து பெற்ற குழந்தையால் நிம்மதி இழந்து தவிக்கும் தந்தையின் கதை


 அப்”””பா ”””   எல்லொரும் எதிர்பார்ப்பது போல் இது ஹாலிவுட்டில் இருந்து திருடபட்ட கதை அல்ல, நம்மை சுற்றி நிகழும் நிகழ்வை படம் பிடித்து தர முயன்றிருகின்றார்கள்.
கதை வெளியானதற்கும் தமிழ் பிரஸ் இன்போவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இதற்காக தமிழ் பிரஸ் இன்போ மும்பை பொருப்பேற்காது என்றும் இது பிளாக்கர்ஸ் சட்டவிதிப்படி பதிக்கபட்டது என்பதையும் இங்கு தெரிவித்து கொள்கிறோம்
தமிழ் பிரஸ் இன்போ-மும்பை
02225463659


                     சிறுவயதில் நாம் நம்முடன் பள்ளிக்கூடங்களில் படிக்கும் சில ஊனமுற்ற சிறுவர்களை கண்டிருக்கிறோம் ஆனால் இவற்றில் சில ஊனங்கள் வித்தியாசமானவைகளாக இருக்கும். ஆம் நன்றாக பார்ப்பதற்கு தோற்றமளிப்பார் ஆனால் கடுமையான மன நோயாளியாக இருப்பார். குருடு, செவிடு, முடம் போன்றவற்றை விட வித்தியாசமான ஊனமுற்றோர்களை நாம் பார்த்திருக்கிறோம்.
                   
                     அதில் உள்ள ஒற்றுமை என்ன வென்றால் இந்த வித்தியாசமான வர்கள் அனைவரும் பெரிய பிரபல் வழக்கறிஞர்கள், போலீஸ் அதிகாரிகள், மற்றும் அதிகார பலம் வாய்ந்த அதிகாரிகளின்  குழந்தைகளாக இருப்பதுதான். நம்முல் பலர் சொல்ல கேட்டு இருக்கிறோம் எத்தனை பேரின் வாயில் விழுந்தானோ அதுதான் அந்த சாபம் தான் இப்படி குழந்தையாக பிறந்து இருக்கிறது என்பார்கள்.
                     கதை இந்த வரியை மையமாக வைத்துதான் நகர்கிறது. நகரின் சுமாரான பிரபலமான ஒருவர் சில வருடங்களிலெயே பெரும் பணக்காராக மாறிவிடுகிறார். பிறகு அரசியலில் நுழைய அவருக்கு செல்வம் நான்கு புறம் இருந்தும் கொட்ட ஆரம்பிக்கிறது. வாழ்க்கை மகிழ்ச்சி என்னும் கடலில் ஆனந்தமாக போய்க்கொண்டு இருக்கும் போது ஆனந்ததிற்கே மகுடம் சூட்டும் சம்பவம் போல் பிரபலத்தின் மனைவி கருத்தரிக்கிறாள். 10 மாதமும் சந்தொசம் வெட்கம் பூரிப்பு என சென்று கொண்டிருந்த நாட்கள் ஆண்குழந்தை ஒன்றை பெற்றெடுக்கும் வரை நீடிக்கிறது. குழந்தை பிற குழந்தைகளைவிட பிறக்கும் போதே வயதான தோற்றத்தில் பிறந்து விடுகிறது. வீட்டில் அன்றில் இருந்து நிம்மதி இழந்து தவிக்கின்றனர். அபிசேக் குழந்தையின் தந்தையாக நடித்து இருக்கிறார். அமிதாப் பச்சன் 13 வயது பொரோகிரியாவால் பாதிக்கபட்ட குழந்தையாக நடித்து இருக்கிறார்.
                            பரேஸ் ராவல் அபிசேக்கின் உதவியாளர் இவர் மூலம் குழந்தையை எங்கேயாவது போட்டு விட்டு வாருங்கள் என்று கூறுகிறார். ஆனால் குழந்தையின் அன்னை வித்யா பாலன் குழந்தையை இறுதிவரை வளர்க்க உறுதிபூண்டு குழந்தையின் எதிர்காலத்திற்காக தனது வாழ்க்கையை மாற்றி அமைக்கிறார். இறுதியில்ம் அபிசேக்கும் மனம் திருந்தி குழந்தையின் எதிர்காலத்திற்காக இருவருமாக சேர்ந்து மருத்துவம், மற்றும் இது போன்ற நோயால் பாதிக்கபட்ட குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பாடுபடுகின்றனர்.
இசை இளையராஜா இவரது இசையில்(சீனி கம்) லயித்த அமிதாப் அப்”””பா””” வில் நீங்கள் தான் இசை அமைக்கவேண்டும் என்று கேட்டுகொண்டதற்கு இனங்க சிறப்பாக இசை அமைத்துள்ளார்.



1 கருத்து: