3 நவ., 2009

யாருக்கு என்ன வேண்டும்(புதிய பாலிவுட் திரைப்படம்)



மும்பை, நவம்பர்.4
கூட்டனியால் ஆட்சியின் போது குடைச்சல் வரும் இது இந்த காலத்தில் சகஜமாகிவிட்டது. நரசிம்மராவ் காலத்தில் ஆரம்பித்த இந்த குடைச்சல் மாநிலங்களிலும் பரவி வருகிறது. இந்த குடைச்சல்களை கொடுத்து எடுத்து சமாதான படுத்திவிடுவார்கள்(அதற்காகத்தானே குடைச்சல்கள் வருகிறது). மராட்டிய மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் முன்பே வித்தியாசமான குடைச்சல் ஆரம்பித்து விட்டார்கள்.
சரத் ராவ் அண்ட் சோனியா பிரசண்ட்:- யாருக்கு என்ன வேண்டும்இயக்கம் மற்றும் நடிப்பு:- அசோக்சவான் சஜன் புஜ்பால்
இசை:- ராஜ் தாக்கரே அண்ட் 13 எம் எல் ஏ ,
மற்றும் துணை நடிகர்களாக நடிகர்கள் 228 எம் எல் ஏக்கள் நடிக்கும் யாருக்கு என்ன வேண்டும்
காமடியன்கள்:- அபு ஆஸிம், ரமேஸ் வாங்களோ
ரிலீஸ் தேதி இன்று ஆகவேண்டியது ஆனால் சில ஏரியாக்கள் இன்னும் சரியாக செட்டில் ஆகாததால் இன்னும் இழுபறி 
திரைக்கதை
            கடந்த 10 வருடமாக மராட்டிய மாநிலத்தை தங்கள் வசம் வைத்திருந்த மராட்டா மாவீரர்கள்(காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ்) மீண்டும் கடுமையான போருக்கு பிறகு (மாலை நேரங்களில் எதிரனி படைக்குள் மாறுவேடத்தில் புகுந்து அனைவருக்கும்  சாராயம் வாங்கி கொடுத்து மறுநாள் போரின் போது அவர்களுக்குளேயே மோதி விட்டு பார்க்கும் வேலைகளை கண்ட எதிர்படைகள் (சிவசேனா பாரதிய சனதா) களத்தைவிட்டு விலகிவிட்டது. மூன்றாம் அணியோ போருக்கான ஆயுதங்கள் எதுவும் கொண்டு வராமல் இரண்டு அணியினரிடம் கிடைத்தை வாங்கி கொண்டு களத்தின் ஓரம் நின்று வேடிக்கை பார்த்த காரணத்தால் முழுமையான வெற்றி காங்கிரஸ் தேசியவாத காங்கிஸ் கிடைத்தாக அறிவிக்கபட்டது.

        ஆட்சி அமைக்கும் பொழுது வில்லன் நாராயன் ரானே திடிரென திருந்தி ஹீரோவிற்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கி விடுகிரார். இதனால் வில்லன் இல்லாமல் படம் சுவாரஜ்யமாக இல்லை என்று நினைத்து தங்களுக்கு உள்ளேயே வில்லனாக மாறி படத்தை சுவாரஜ்யமாக்க முயன்றனர். ஆனால் படத்தின் திடீர் திருப்பமான வில்லன் பாத்திரத்தில் சுவாரஜ்யம் வருவதற்காக தங்களுக்கு உள்ளேயே போர் செய்து வருகின்றனர்,


           இருவருக்கும் இரண்டு மந்திரி பதவியில் குறி ஒன்று ஒன்று உள்த்துறை மற்றொன்று அர்பன் டிவிலோப்மெண்ட் எனப்படும் வளர்ச்சி துறை உள்த்துறை தங்களின் மீது உள்ள குற்றங்களை மெல்ல மெல்ல நீக்கிவிட இரண்டாவது இந்த 5 வருடத்தில் அனைத்து எம் எல் ஏக்களும் பாரபட்சமின்றி பில்டர்களிடன் குறைந்தது 20 கோடியாவது பார்த்துவிடவேண்டியது என தேசிய வாத காங்கிரஸ் குறிவைக்க இதே காரணத்தை காட்டி காங்கிரஸும் நிற்கிறது.

                               இதனால் படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் பெட்டியில் அடங்கி இருக்கிறது. பணம் போட்டு திரைப்படம் வாங்கிய தொழில் அதிபர்கள் ரிலீஸ் செய்யமுடியாமல் தங்களின் பணி பாதிகபட்டு இருக்கின்றன. எப்போழுதும் போல் இந்த முறையும் இந்த படத்தை ஹிட் ஆக்கிவிட முயற்ச்சிக்கு ரசிக பொதுமக்கள் படம் ரீலீஸ் ஆவதற்கு தாமதாவதாம் வருத்ததில் இருக்கின்றனர்.
          படத்தயாரிப்பாளர்களின் பேச்சாளர் பிரபுல் பாய் படேல் என்பவர் சொல்லும் போது படம் விரைவில் ரிலீஸ் ஆகிவிடும் என்று மட்டும் கூறிவிட்டார். இப்படத்தின் இரண்டாம் ஹீரோ சஜன்புஜ்பாலை கேட்ட போது அவர் படம் ரிலீஸ் ஆவதில் எங்கள் தரப்பில் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் படம் ரிலீஸ் ஆகவிடமாட்டோம் என்றார். ரெயில்வே ஸ்டேசன் மற்றும் பொது இடங்களில் இசை அமைத்து பிரபலமான ராஜ் தாக்கரே குழுவினரின் இசை ஆரம்பமே அமர்க்களமாக இருக்கும் போல் தெரிகிறது. சமீபத்தில் இசை அமைப்பாளர் ராஜ் தாக்கரே தங்களது திகில் இசைக்குழுவினருடன் பேட்டி அளிக்கும் போது சட்ட மன்றத்தில் தப்பு, டவரா, டோல் இசை தான் முழங்க வேண்டும் அதை விட்டு விட்டு ஹிந்துஸ்தானி சங்கீதம் இசைத்தால் தோலை உரித்து டோல் செய்து அதில் இசை எழுப்புவோம் என அறிக்கை விட்டதும் இந்த திரைப்படத்தை பெரிதும் எதிர்ப்பாப்பிற்குள்ளாகி இருக்கிறது.

                 எப்படியும் இந்த வாரத்திற்கு ரிலீஸ் ஆகிவிடும் என தெரிகிறது படத்தில் அப் டு டேட் விமர்சனங்கள் உங்கள் தமிழ் பிரஸ் இன்போ-மும்பையில் மட்டும் நேரடி ஒலிபரப்பு






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக