5 நவ., 2009

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்



 கடந்த வாரம் மும்பை தாராவியில் தமிழ் சிறுவன் அந்த பகுதியில் வாழும் இளைஞர் ஒருவரால் பாலியல் வண்முறைக்கு உள்ளானது அனைவருக்கும் தெரிந்ததே, காலை 10 30 மணி அளவில் அந்த சிறுவனின் பெற்றோர்கள் தாராவி போலீசில் புகார் கூறி உள்ளனர். முதலில் எப் ஐ ஆர் கூட பதிவு செய்யாமல் குற்றமிழைத்த இளைஞனை அழைத்துவந்து பேச்சுக்கு மிரட்டி விட்டு லாக்கப்பில் கூட வைக்காமல் அங்கிருந்த அமர் பலகையில் அமரவைத்துவிட்டு அதிகாரி வரம்பில் உள்ள ஒருவர் ரவுண்டிற்கு சென்றுவிட்டார். அந்த பகுதியில் உள்ள சில பெரித தலைகள் வந்து காவலர்களிடம் கொடுக்கால் வாங்கல் செய்ய சிறுவனின் பெற்றோரை அழைத்து சமாதானம் பேசி இருக்கிறார்கள். சிறுவனின் அன்னையின் சகோதரர் அந்த பகுதியில் உள்ள தமிழ் பெரிய மனிதர்களிடம் செல்ல (தேர்தல் தான் முடிந்து விட்டதே) நான் அந்த வேலையில் பிசி, எனக்குதெரிந்த போலீஸ் ஆபீசர் ஊரில் இல்லை என்று மழுப்பலான பதில் சொல்லி நழுவிட்டனர். மாலை 3 மணிவரை எப் ஐ ஆர் பதியவே இல்லை, முதல் மந்திரி பிறந்தநாள் விழாவிற்கு சென்று கொண்டிருந்த எனக்கு திரு செந்தில் போன் செய்தார். இப்படி பிரச்சனை சரவணா போலீசார் எப் ஐ ஆர் பதிவு செய்யாமல் சமாதானமாக போக சொல்கிறார்கள் நேரம் ஆக ஆக மிரட்டவும் செய்கிறார்கள், குற்றவாளியை இன்னும் விசாரிக்க கூட இல்லை, என்றார்.

                       முதலில் எனக்கு தெரிந்த கிரைம் பத்திரிக்கையாளர்களிடம் இது குறித்து பேசினேன். பிரபல மாலை பத்திரிக்கை ஒன்று நேரடியாக தாராவி போலீஸ் ஸ்டேசனில் பேச செய்தி எப்படி பத்திரிக்கை நிருபர்களுக்கு சென்றது என்று மீண்டும் மிரட்டல் விட நேரம் இரவு 9 ஆகிவிட்டது அப்பொழுது கூட எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் இருக்கவும், மேலிடத்தில் சொல்வதை தவிர வேறுவழியில்லாமல் போய் விட்டது.

                 மேலிடத்தில் இருந்து இது குறித்து கேட்டவுடன் இரவு காவல் உயரதிகாரி குற்றவாளி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார். அதாவது புகார் கூறிய 18 மணிநேரம் கழித்து,,,,,,,, மறுநாள் மும்பையில் உள்ள அத்தனை பத்திரிக்கையிலும் இந்தி, ஆங்கிலம், மராட்டி,குஜராத்தி) . சிறுவனுக்கு நடந்த கொடுமைபற்றி செய்திகள் வர தாராவி காவல் நிலையம் தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டது,  இரவு முழுவதும் ஏன் சிறுவனையும் அவரது தந்தையையும் காவல் நிலையத்தில்வைத்திருந்தீர்கள் என்று கேட்டதற்கு பகலில் உள்ள அதிகாரி பதில் சொல்வார் என்று சொல்லிவிட்டார்.
             
                         காலையில் முக்கிய டெலிவிசன் சேனல்கள் தாராவி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட பையனிடம் நேரடியாக பேட்டி அளிக்க கூடாது என்று நினைப்பில் தாராவி போலீசார் சிறுவனை நாக்பாடா போலீஸ் மருத்துவமனைக்கு சிறுவனை பரிசோதனைக்கு கொண்டு சென்று விட்டார்கள். இறுதியாக குற்றவாளி நவம்பர் 2 தேதிவரை போலீஸ் காவலில் அடைக்கபட்டார்.குற்றவாளி இந்த மாநிலத்தை  சேர்ந்தவர் என்பதால் போலீசார் கொஞ்சம் தளர்வாகவே இருந்தனர். தற்போது குற்றவாளி போலீஸ் ரிமாண்ட் முடிந்து டோம்பிவிலி சிறையில் அடைக்கபட்டுள்ளார். அந்த பகுதியில் உள்ள சில சமூக சேவை நிறுவனங்கள் பாதிக்கபட்ட சிறுவனின் பெற்றோர்களிடன் சமாதானம் பேச முயன்றனர்.

குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுக்கவேண்டும் என்ற நோக்கமல்ல இனி மேலும் யாரும் தமிழர் மீது கைவைக்க சிந்திக்க வேண்டும் என்பதும் இனிமேலும் இது போன்ற குற்றங்களை செய்யும் முன்பு குற்றவாளி சட்டத்தின் மீது பயப்படவேண்டும் என்பதே எமது நோக்கம்.

சிறுவன் சிறிது பயந்தது போல் காணப்படுகிறான்,
சிறுவனின் பெற்றோர்கள் 3 நாட்கள் மும்பை சயான் மருத்துவமனையில் வைத்திருந்தார்கள். இதனால் நஷ்ட ஈடு கேட்கலாம் என்று தெரிந்த வழக்கறிஞர்களிடன் ஆலோசனை கேட்டு இருக்கிறேன்.

செய்தி ஒலிபரப்பான சேனல் கள்
Zee TV, AJ Tak, E Tv (marathi) Star News, News 24, Zee 24 thaas (Marathi)



21-year-old school dropout held for sodomising boy in Matunga

Thursday, October 29, 2009 2:19 IST


Mumbai: Officers of the Shahu Nagar police station have arrested a 21-year-old school dropout on Wednesday for allegedly sodomising a six-year-old boy at Matunga Labour Camp.
click here

Senthil Kumar, 32, the victim's uncle, said, "My nephew is a Std I student in a Bandra school. On October 26, he told his mother [Kavita] that he wanted to reveal something important if she did not scold or beat him. After his mother assured him, the boy revealed that their neighbour Nikesh Balid took him to his home in the afternoon four days ago on the pretext of playing games and sodomised him," said Kumar.

The victim's parents then lodged a complaint with the Shahu Nagar police against Nikesh on Tuesday, said Kumar. "We have arrested Balid on Tuesday. He was booked under sections 377 (unnatural offences) and 504 (intentional insult with intent to provoke breach of the peace) of the IPC," said senior inspector Waman Ghadigaonkar.

Incidentally, when the victim's father Kalidas went to the police station along with the boy to lodge complaint around 11.30 am on Tuesday, they were asked to sit at the police station throughout the day and also spent entire night in the police station. On Wednesday morning, the victim was sent to Nagpada police hospital for medical check-up.

Senior inspector Ghadigaonkar refused to comment on the matter.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக