19 டிச., 2009

எபிசோட் நம்பர் 2



  ஃபகிம், அன்சாரி மும்பை தாக்குதல் முடிந்த நான்காவதுவாரம், உத்திரபிரதேசத்தில் வைத்து கைது செய்யபட்டனர். இருவரிடன் இருந்து பெற்ற கையெழுத்தும், சுட்டு கொல்லபட்ட தீவிரவாதிகளிடம் இருந்து பெற்ற சில கையெழுத்து வரைபடங்களும் ஒத்து போனது. நவம்பர் முதல் ஜனவரி இரண்டாம் தேதிவரை கதையின் கரு கிடைக்காமல் அல்லாடிகொண்டு இருந்த பாதுகாப்பு துறையினருக்கு(மும்பை காவல்த்துறை இதர) ஃபாகிம், அன்சாரி மூலம் கரு கிடைத்தது. உடனே கதை ஆரம்பமானது. முன்னுடை-லஷ்கர் எ தொய்யபா- நீண்ட கால திட்டம்- இந்திய பொருளாதாரம்-மும்பை- கடல்வழி-பணய கைதி-கொலைகள்-சுபம்.

கிர்காவ் கடற்கரையில் இஸ்மாயில் கொல்லப்பட்டது, ஒரே ஒருதீவிரவாதி அஸ்மல் கசாப் பிடிபட்டது, புரியாத மெட்ரோ தியேட்டர் அருகில் ஒரு காரை கடத்தி செல்கின்றனர். கிர்காவ் கடற்கரையில் போலீசாரால் அந்த கார் வழிமறிக்கபடுகிறது. காரில் இருந்தும் துப்பாக்கி சூடு வெளியில் போலீசார் துப்பாக்கி சூடு இறுதியில் கார் நிற்கிறது. சில வினாடி அமைதிக்கு பிறகு ஹெட்கான்ஸ்டபிள் ஓம்ளே காரின் கதவை திறக்கிறார். கசாப் ஒம்ளேவை சுட்டுகொல்கிறான். அதன் பிறகு அவனை சுடாமல் (பொன்னே பூவே) என போலீசார் கைது செய்கிறார்கள் சரி அவனை உயிரோடு பிடித்தது பாராட்ட கூடிய விடயம்.

கசாப் எப்படி உயிர் பிழைத்தான் என்பது மில்லியன் டாலர் கேள்வி ஒன்று காரில் ஏறிய உடனே முன்னால் நன்றாக உடலை முன்சிட்டின் இடையில் ஒளிந்திருக்க வேண்டும். இதற்கு குறைந்தது 5 நிமிடமாவது பிடிக்கும், அதுவும் கசாப் போன்று ஒருவன் முன்புறத்தில் ஒளிவது இயலாத காரியம், அப்படியே அவள் உயிர் பிழைக்க ஒளிந்தால் உடன் வரும் இஸ்மாயில் சும்மா விடுவானா!!!!

கர்கரே மற்றும் மூன்று போலீஸ் உயரதிகாரிகள் மரணம் , கசாப் உயிருடன் பிடிபட்டது எல்லாம் முள்ளிவாய்க்கால் மர்மம்.
ஒருவருடம் கோர்ட்விசாரனை நேற்றுடன் முடிந்துவிட்டது. நாளையில் இருந்து வாக்கு மூலம் பெறப்படும் அதாவது இதை இதை நீ சொன்னாய் இதெல்லாம் சரியா என்று குற்றவாளியிடம் கேட்கபடும்.
இந்த நிலையில் அக்டோபர் 3 தேதி மும்பை தாக்குதல் பார்ட் 2 சிகாகோவில் துவங்குகிறது. ஆம் டேவின் கோல்மன் ஹெட்லி மற்றும் தன்வர் ரானா என்ற இரண்டு அமேரிக்க, கனடா நாட்டு குடியுறிமை பெற்ற பாகிஸ்தானியர்களின் மூலம்,
பல முறை மும்பை மற்றும் இந்தியாவின் பல நகரங்களுக்கு வந்திருக்கிறார்கள். இங்கு டிராவல் நிறுவனம் ஒன்றை நடத்தி இருக்கிறார்கள். பலரை பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கும் இந்தியாவில் இருந்து பல அயல்நாடுகளுக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள்.
அதாவது மும்பையில் தாஜ், சி எஸ் டி, ஒபராய் மற்றும் நரிமன் ஹவுஸ் போன்ற இடங்களை காணொலி படம் எடுத்து இருக்கிறார்கள். அதாவது மும்பை தாக்குதலின் மூளை இவர்கள் தான் ஆரம்ப கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது. அப்படி என்றால் இவர்களை பற்றி கசாபிற்கு தெரியாதா அல்லது அவனிடம் மும்பை பற்றி தகவல் தந்தவர்கள் வேறுயார் என்று  விசாரிப்பவர்கள் கேட்கவில்லையா,
ஒரு நாளைக்கு கசாபிற்கான செலவு 23 ஆயிரம்,தவிர 3 ஷிப்ட் திபெத் எல்லை காவல்படை போலீசார், இரண்டு சிறப்பு போலீஸ் உயரதிகாரி, இரண்டு சிறப்பு மருத்துவர், ஒரு சமையல்காரர், (குளிர்சாதன அறை-இது யூகம் மட்டுமே) 5 கண்காணிப்பு காமிரா(சிசிடிவி), இதர இதர இதர,,,,,
  இதில் மூன்று முறை மயக்க சோதனை செய்யபட்டதாம் அதில் அவன் பல உண்மைகளை சொன்னானாம், அப்படி என்றால் டேவிட் ஹெட்லி , தன்வர் ரானே பற்றி ஒன்றும் சொல்லவில்லையா? அல்லது கேட்கவில்லையா? முக்கியமான ஒன்று தீவிரவாதிகளுக்கு டேவிட் ஹெட்லி எடுத்த மும்பை விடியோ படங்கள் காட்டபட்டது. இது சமீபத்திய உண்மை,
டேவிட் ஹெட்லி மற்றும் தன்வர் ரானே மூலமாக மும்பை தாக்குதல் தொடரில் இரண்டாம் பாகம் ஆரம்பித்து இருக்கிறது. இதுவும் டிவி மெகா தொடர்போல இழுத்துசெல்லும் என்று தெரிகிறது.
நான் முன்பே குறிப்பிட்டது போன்று இனி கசாபிற்கு ராஜா போக வாழ்க்கைதான், விசாரனை மீண்டும் புதிய அத்தியாயத்தில் துவங்க இருக்கிறது.
அசோக் காம்டேவின் மனைவி வினிதா காம்டே தனது புத்தகமான கடைசி குண்டு(the last bullet)  என்ற புத்தகத்தில் இறுதியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அதாவது “பாதி உள்ளே பாதி வெளியே இருந்து தயாரிக்கபட்ட திட்டம் மும்பை தாக்குதல்” டேவிட் ஹெட்லிக்கு உதவியவர்கள் என்று இந்தியாவில் இதுவரை யாரும் கைது செய்யபடவில்லை, அல்லது அவர்கள் காப்பாற்றபடுகிறார்கள்.ஒரு கசப்பான உன்மைகள் விரைவில் வெளிவரும் அது மும்பை தாக்குதல் மூன்றாம் எபிசோட்டாக இருந்தாலும் இருக்கலாம்.
கசாப் கோர்ட்டில் சொன்ன சில வாக்குமூலம்:- மும்பை தாக்குதல் நடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவனை ஜுஹு ரோட்டில் வைத்து மும்பை போலீசார் கைது செய்தனர்.
:- மும்பைக்கு திரைப்படத்தில் நடிக்கும் நோக்கத்தில் கடந்த 6 மாதமாக மும்பையில் தங்கி இருந்தேன்.
:- நான் பாஸ்போடர்டுடன் கைது செய்யபட்டேன்.
:- எனது பாஸ்போட்டை போலீசார் கிழித்து போட்டு விட்டனர்.
:- நான் எ.கே 47 ஐ பார்த்ததே கிடையாது
:- டேவிட் ஹெட்லி உடன் மூன்று வெள்ளைக்காரர்கள் பகிஸ்தானில் என்னை சந்தித்தனர்.
:- அவர்கள் டிராவல் ஏஜெண்ட் என்று என்னிடம் சொல்லி இருந்தனர்.
:- பத்திரிக்கையில் உள்ள படத்தில் இருப்பவன் என்னை போல் உருவம் கொண்டவன்.
:- அது நான் அல்ல
:- எனக்கு வயது 22
:- ஆனால் கோர்ட் என்னை முதலில் 17 வயது என்று சொன்னது பிறகு 20 வயது என்று சொல்கிறது.
:- மும்பை போலீசார் என்னை வற்புறுத்தி வாக்குமூலம் பெறவைத்தார்கள்.
:- திரைப்படம் நடிப்பதற்காக நான் பலரை சந்தித்து இருக்கிறேன்.
எனக்கு வாய்ப்பு கொடுத்தால் அனைவரின் பெயரையும் சொல்லுவேன்.
  இன்னும் என்ன என்ன கூத்துக்கள் காத்து இருக்கின்றதோ



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக