5 செப்., 2009

பிக் பி அமிதாப் மீண்டும் சின்ன திரையில்.

மும்பை,செப்.05
இந்தியா எங்கும் பரபரப்பாக ஒலிபரப்பிய ஒரு நிகழ்ச்சி, கோன் பனேக குரேட் பதி, அமிதாப் தனது வசீகரகுரலால் ஒரு மணிநேரம் இந்தியாவையே கட்டி போட்டிருந்தார்.
கோன் பனேகா குரேட்பதி நிகழ்ச்சிக்கு பிறகு அதே போன்ற நல்ல நிகழ்ச்சி ஒன்று கிடைக்கதாலும், கொஞ்சம் ஓய்வு தேவை என்பதாலும் அமிதாம் 5 வருட காலம் ஓய்வில் இருந்தார். இந்த இடைவெளியில் பிளாக் போன்ற வெற்றிகரமான படங்களில் நடித்து முடித்தார்.
இந்நிலையில் தற்போது பிரபலமாகிகொண்டு இருக்கு இந்திசேனலான கலர் சேனலில் சமீபத்தில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை நடத்தில் பிரபலமாது, இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே சில சர்ச்சைகளை உறுவாக்கினாலும், ஒட்டுமொத்தாக வெற்றியை பெற்றது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர் ஆரம்பிக்கபடுவதாக தெரிகிறது.
கலர் சானலில் தலைமை நிர்வாக இயக்குனர் ராஜேஸ் காமத் நிருபர்களிடம் கூறும் போது, பிக்பாஸ் 3 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளது. இந்த முறை இந்த நிகழ்ச்சியை கடந்த இரண்டு நிகழ்ச்சியை விட சிறந்த நிகழ்ச்சியாக நடத்தி காட்ட இருக்கிறோம்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அமிதாப் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அமிதாப் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி இந்தியா மட்டுமல்ல உலகம் எங்கும் பெரிய வரவேற்பை எற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்றார். இது நாள் வரை தனது கேரக்டருக்கு தனித்துவம் கொடுக்கும் விதத்தில் நடித்து வந்த அமிதாப் பச்சன் இது போன்ற குழு நிகழ்ச்சிகளில் எப்படி தோன்றுவார் என்று அனைவரும் ஆச்சர்யத்துடன் வினவி வருகின்றனர்.
பிக்பாஸ் 3 குறித்து அமிதாபை தொடர்பு கொண்ட போது இந்த நிகழ்ச்சி குறித்து என்னிடம் பேசி இருக்கின்றார்கள். நான் இது குறித்து இப்போது ஒன்றும் சொல்ல விருப்பமில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக