11 செப்., 2009

இன்றைய அரசியல் காட்சி

தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளார்கள் தேர்வு குறித்து ஆலோசனை மும்பை நரிமன் பாய்ண்ட்டில்

உள்ள தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
இந்த கூட்டம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மற்றும் மத்திய விவசாய்துறை மந்திரி சரத்பாவார் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மராட்டிய மாநில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்ஆர்.ஆர்.பாட்டில் , துணைமுதல் மந்திரி சகன் புஜ்பால், முன்னாள் மாநில மந்திரி சூர்யகாந்த் பாட்டில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நிவேதிதா மானே, தற்போதைய அரசின் மந்திரிசபையில் பங்குவகிக்கும் மந்திரி விஜய்சிங் மோகிதே பாட்டில், முன்னாள் மாநில தலைவர் அருன் பாய் குஜராத்தி, மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் பாபன் ராவ் பாஜ்புதேம் ஹேம்ந்த டாக்ளே, குருநாத்குல்கர்னி, ஆகொயோர் கலந்து கொண்டனர்.
 ஸ்வபிமான் இயக்கத்தின் தலைவர் நிதேஸ் ரானே-தொழில்த்துறை மந்திரி நாராயன் ரானேவின் மகன்- மராட்டிய மாமன்னன் சத்திரபதி சிவாஜி குறித்த புத்தகம் ஒன்றை நவிமும்பை வாஜியில் ஆர்பிட் மாலில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியின் போது ஸ்டார்டீவில் நடந்து வரும் சத்திரபதி சிவாஜி குறித்த வரலாற்று நாடகத்தில் சிவாஜியாக வேடமிட்டு வரும் அமோல் கோள்கே, மற்றும் புத்தக ஆசிரியர் நாம்தேவ் ஜாதவ் ஆகியோர் உடனிருந்தனர். இந்த நிகழ்ச்சியின் போது நிதேஷ் ரானே மும்பையில் உள்ள புத்தகடைகளில் மராட்டி புத்தகங்கள் பார்க்க கிடைப்பதில்லை, அதனால் மராட்டிபுத்தகத்திற்கு முன்னுரிமை அளித்து அவற்றை விற்பனைக்கு வைக்குமாறு கேட்டுகொண்டார் - நிதேஷ் பாய் வைக்கலாம் ஆனால் யார் வாங்குவார்கள்-
மத்திய எரிசக்தி துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே இன்று மும்பை காந்திபவனில் வைத்து பத்திரிக்கை நிருபர்களை சந்தித்தார். இந்த நிகழ்ச்சியின் போது மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் மானிக்ராவ் தாக்கூர், மும்பை காங்கிரஸ் தலைவர் கிருபாசங்கர் சிங், மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் சஞ்சய் தத், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜிவ் சாவந்த், மற்றும் பிரமுகர்கள் உடன் இருந்ததனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக