7 செப்., 2009

ஆஸ்திரேலிய பெண் மானபங்கம் இரண்டு இந்திய மாணவர்கள் கைது.

  
சிட்னி,செப்.07

மெல்போர்னில் இருந்து சிட்னி வந்து கொண்டிருந்த தொடர்வண்டியில்
ஆஸ்திரேலிய பெண் ஒருவர் இரண்டு இந்திய மாணவர்களால் மானபங்கபடுத்தபட்டார்.

இந்தியாவை சேர்ந்த சுக்வீந்தர் சிங் -22- அமர்ஜீத சிங் 28 ஆஸ்திரேலியாவில் தங்கி படிக்கும் இவர்கள்  மெல்போர்னில் இருந்து சிட்னிக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் அமர்ந்திருந்த பெட்டியில் தனியாக வந்து கொண்டு இருந்த ஆஸ்திரேலிய பெண் ஒருவரை  மானபங்க படுத்த முயற்சித்தனர்.

இதனை அடுத்து அந்த பெண் கல்பர்ன் ரெயில்வே நிலையத்தில் இந்த இளைஞர்கள் மீது புகார் கூறினார். ரயில்வே ஊழியர்கள் இரண்டு இளைஞர்களையும் சிட்னி போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிட்னி போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் ஜாமின் கேட்டு வின்னப்பித்து இருந்த போது இவர்களின் ஜாமீன் மனு நிரகரிக்கபட்டது.
 
இரண்டு மாணவர்கள் மீது பெண்ணை மானபங்கபடுத்தியதாக வழக்கு தொடரபட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக