5 செப்., 2009

சிவசேனாவிற்கு கிடைத்த ஹோம் மினிஸ்டர்.

 
சனி,செப்.05
            பிரபல மராட்டி தொலைக்காட்சி நடிகர் ஆதேஷ் பெட்னேகர் நேற்று சிவசேனா கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய உத்தவ் தாக்கரே, அரசியல் கட்சிகள் ஆட்சி அமைத்த பிறகுதான் ஹொம் மினிஸ்டர்கள் நியமிக்கபடுவார்கள். ஆனால் தேர்தல் வருவதற்கு முன்பே எங்களுக்கு ஹோம் மினிஸ்டர் கிடைத்துவிட்டார் என்று கூறினார்.

  திரு ஆதேஷ் பெட்னேகர் மராட்டி சேனல்கள் நடிகராகவும், பல நிகழ்ச்சிகளில் நடுவராகவும் தோன்றியுள்ளார். மராட்டியர்களிடத்தில் பிரபலமான நான் ஹோம் மினிஸ்டர் என்ற ரியாலிட்டி ஷோ- நேரடி நிகழ்ச்சியில் இவர் ஹோம் மினிஸ்டராக வந்து மக்களின் பிரச்சனைகளை எடுத்து கூறுவார்.

இதனால் இவர் "ஹோம் மினிஸ்டர்" என செல்லமான அழைக்கபட்டு வந்தார்.
இவர் நேற்று மாலை மும்பை புறநகரில் உள்ள மாதேஸ்ரீ இல்லத்தில் சிவசேனா செயல்குழு தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து சிவசேனாவில் இணைந்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது எதிர்கட்சி தலைவர் ராம் தாஸ் கதம் மற்றும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்கள் பல உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக