5 செப்., 2009

மாநில அரசு தேர்வுகள் செப்டம்பர் 15 முதல்


மும்பை, செப்.06

மராட்டிய மாநில அரசு தேர்வானை நடத்தும் அரசுதேர்வுகள் செப்டம்பர் 15 முதல் துவங்கும் என்று மராட்டிய அரசு தேர்வானை அறிவித்துள்ளது.

கடந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு தேர்வுகள் எழுதி மதிப்பெண் குறைய பெற்றவர்களும் தேர்ச்சி பெறாதவர்களும், மீள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இது குறித்து இன்று மாநில அரசு தேர்வானையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மீள் தேர்வெழுத விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரீசிலிக்கபட்டு விட்டது. இந்த தேர்வுகளுக்கான இறுதி நடவடிக்கை துவங்கி விட்டது. இந்த மாதம் 15-ம் தேதி முதல் தேர்வுகள் நடத்தப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 இந்த தேர்வுகளில் பதவி உயர்விற்காக தேர்வெழுதுவோர், தனியார் தேர்வர், மற்றும் குறைந்த மதிப்பெண், தேர்ச்சி அடையாத மாணவ மாணவிகள் என அனைத்து தரப்பினரும் எழுத அனுமதிக்கபடுவார்கள் என்றும் இந்த தேர்வுகளின் முடிவு இந்த மாத இறுதிக்குள்ளாகவே வெளியாகிவிடும் மேலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்த வருட கல்வி ஆண்டில் இருந்தே 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரிகளுக்கு சேரலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.

1 கருத்து: