30 அக்., 2009

தமிழர் போட்ட வோட்டிற்கு கிடைக்கும் பரிசு



           ஆசியாவிலேயே அதிக குடிசைபகுதிகள் நிறைந்த இடம் என்ற பெருமை பெற்ற தாராவி திருநெல்வேலி நகரத்தின் மக்கள் தொகை தமிழர்களை தன்னுள் கொண்டது அனைவரும் தமிழர்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கி.பி 600 நூற்றாண்டுகால வரலாற்றை கொண்ட மும்பை தமிழர்கள் வாழ்க்கையில் தாராவியில் தமிழர்களின் குடியேற்றம் 1870- ஆரம்பித்து அப்போது வெறும் 5000 குடும்பங்களாக இருந்த தமிழர்கள் இன்று தாராவியில் மட்டும் சுமார் 12 லட்சம் என்று தெரியவந்துள்ளது. இது வாக்காளர் அட்டை எண்ணிக்கை ஆகும் வாக்குரிமை பெறாத வாக்காளர் அட்டை கிடைக்காத தமிழர்கள் என இந்த எண்ணிக்கை அதிகம் இருக்கலாம்.
               தாராவியில் குடிசைகளை ஒழித்து விட்டு நவீன தாராவி திட்டம் கொண்டு வர 1994-ல் ஆட்சியில் வந்த சிவசேனா-பாரதிய சனதா கூட்டனி அரசு அச்சாரமிட்டது. அடுத்து தொடர்ந்து 10 வருடங்கள் மராட்டியத்தை ஆண்ட காங்கிரஸ் அரசு தாராவி தமிழர்களை நவீன தாராவி என்று கலர் காட்டி ஏமாற்றி வந்தது. சமீபத்தில் தேர்தலின் போது கூட நவீன தாராவிக்கு பணம் ஒதுக்கியாதுவிட்டது. இன்னும் 5 வருடத்திற்குள் தாராவி உலக தரம் வாய்ந்த ஒரு புதிய நகரமாக உறுவாகிவிடும் என்று கதைவிட்டது. ஒருவிதத்தில் இது உண்மைதான் ஆனால் அந்த நகரத்தில் ஆண்டாண்டுகாலமாக தங்கிஇருந்த தமிழன் இருக்க மாட்டான். காங்கிரஸ் அரசு ஆட்சி கட்டிலில் அமரும் முன்பே தாராவி தமிழர்களை விரட்டும் திட்டம் ஆரம்பமாகிவிட்டது.
          மும்பை மந்திராலயாவில் தாராவி செகடார்(நவீன தாராவி) திட்டம் குறித்து பேசிய மாநில அரசின் திட்டத்துறை செயளாலர் ஜானி ஜோசப் நிருபர்களிடம் பேசிய போதுநவீன தாராவி திட்டத்தில் ஆரம்ப கட்டமாக செகட்டார் 4 உள்ள பகுதிகளை ஆய்வு செய்து அந்த பகுதியில் உள்ள 3000 பேருக்கு மட்டும் தான் வீடுகள் என்று முடிவு செய்யபட்டு உள்ளது. மற்ற 7000 குடும்பங்களுக்கு வீடு வழங்கபடாது என்றும் அவைகள் அனைத்தும் சட்டவிரோத மான குடிசைகள் மற்றும் 2000 பிறகு கட்டபட்டவை என்று தெரிய வந்தது என்று குறிப்பிட்டார்.
           செக்டார் 4 சுமார் 2 லட்சத்திற்கு மேல் தமிழர்கள், மராட்டியர்கள், வட இந்தியர்கள் என்று வசிக்கின்றனர். இந்த நிலையில் 3000 குடும்பங்கள் என்று சொல்லி வெறும் மராட்டியர்களுக்கு மட்டும் வீடுகளை தந்து விட்டு காலம் காலமாக அந்த பகுதியில் இருந்துவரும் தமிழர்களை விரட்டும் திட்டம் வெற்றிகரமாக துவக்கிவிட்டனர்.


           தாராவி தொகுதியில் சட்ட மன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸின் வர்ஷா காயக்வாடின் வெற்றிக்கு தமிழர்கள் தான் முழுக்காரணம் என்பதும் இங்கே குறிப்பிடதக்கது. தமிழர்கள் குறைவாக உள்ள பகுதியில் எல்லாம் சிவசேனாவை விட குறைந்த ஓட்டு பெற்று தோல்வி அடைந்து விடும் நிலையில் இருந்த வர்ஷா இறுதியில் தமிழர்கள் மட்டுமே வசிக்கு ம் 90 பிட் சுபாஸ் நகர், கிராஸ் ரோடு போன்ற பகுதிகளின் ஓட்டு எண்ணபடும் போது வர்ஷா முதலிடம் வந்து வெற்றிபெற்றது இங்கே குறிப்பிடதக்கது.  
****   இந்த ஆபத்து கண்டிப்பாக வரும் என்று நான் தாராவி புத்தகத்தில் ஒரு பரிபோகும் வீடுகள் என்று ஒரு தலைப்பே கொடுத்து இருந்தேன். வழக்கம் போல் நமது தமிழர்கள் ”தாராவி புத்தகத்தில் நல்ல கதை விட்டு இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டு இப்போது தங்களின் கால்களிலேயே போட்டு கொண்டனர்.
 முந்தைய பதிப்பை பார்க்க

 தனது காலில் தானே போட்டு கொண்ட சூடு(தாரவி தமிழர்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக