30 அக்., 2009

மராட்டிய மாநில முதல் மந்திரி அசோக் சவான் ராஜினமா




மும்பை,அக்டோபர்: 26
மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் அமோக வெற்றிபெற்ற காங்கிரஸ் தேசிய வாத காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது, கூட்டனியின் ஒப்பந்தபடி முதல் மந்திரி பதவி காங்கிரஸ் எடுத்து கொண்டது, சனிக்கிழமை சட்ட சபை உறுப்பினர்களின் ஆலோசனைகளின் படி சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் அசோக் சவான் மீண்டும் முதல் மந்திரியாக தேர்தெடுக்கபட்டார். முதல் மந்திரியாக கட்சியினால் தேர்தெடுக்கபட்ட அசோக்சவான் இன்று முறைப்படி தனது சென்ற சட்டசபைக்கான முதல் மந்திரி பதவியை ராஜினமா செய்தார். மும்பை மலப்பார் ஹில்லில் உள்ள ராஜ் பவனுக்கு இன்று காலை சென்ற முதல் மந்திரி அசோக் சவான் மராட்டிய மாநில கவர்னர் சமீரை சந்தித்தார். இந்த சந்திப்பின்

போது தனது கடந்த சட்டமன்றத்தின் முதல் மந்திரி பதவியை சாம்பிரதாயப்படி ராஜினமா செய்து அதன் கடிதத்தை கவர்னர் எஸ் சி சமீரிடன் சமர்ப்பித்தார். ராஜினமா கடிதத்தை ஏற்றுகொண்ட கவர்னர் அடுத்த முதல் மந்திரி பதவி ஏற்கும் வரை தற்காலிக முதல் மந்திரியாக அசோக் சவானை நியமித்து இதற்கான ஆணையை கவர்னர் மாளிகை வெளியிட்டது.


கவர்னருடனான சந்திப்பு முடிந்து வெளிவந்த அசோக் சவான் நிருபர்களிடன் பேசிய போது இன்னும் இரண்டு மூன்று நாட்களில் முதல் மந்திரி பதவிக்கான கடித்தை கவர்னரிடம் வழங்குவோம் என்றும் கூட்டனி கட்சியான தேசிய வாத காங்கிரஸுடன் எந்த ஒரு சிக்கலும் இல்லை என்று கூறினார். இருப்பினும் டில்லியில் அவர் தெரிவித்த உள்துறை காங்கிரசுக்கு கிடைத்தால் நல்லது என்ற கருத்தை பற்றி கேட்டபோது அவர் சரியான பதில் சொல்லாமல் கூட்டனி கட்சியுடன் கலந்து ஆலோசித்து மந்திரி பதவிபகிர்வு பற்றி முடிவு செய்வோம் என்றார். முதல் மந்திரி

அசோக்சவானுடன் மும்பை பிரதேச தலைவர் கிருபா சங்கர் சிங், மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக