27 அக்., 2009

எதிர்கட்சியாக இருக்க ஏன் மறுக்கிறார்கள்.


எதிர்கட்சி தலைவர் பதவி என்பது மலர் மஞ்சம் அதில் மனம் போன போக்கில் அமரலாம், தவறுகளை துணிச்சலுடன் யாராக இருந்தாலும் விரல் நீட்டி சுட்டி காட்டலாம், ஆனால் முதலமைச்சர் பதவி என்பது முட்களும், தாங்குநாற்காலிகளை சுற்றிய நாகங்களும் தலைக்கு மேலே வேலைகள் இன்னும் இருக்கின்றன என்ற கத்தியும் எப்போது உழன்று கொண்டே இருக்கும் பதவி முதல்வர் பேரறிஞர் அண்ணாத்துறை தமிழ் நாடு (நல்ல மனுசங்கள நம்மாளுக சீக்கிரமே மறந்து விடுவார்கள் அதுதான்)
சனநாயகத்தில் எதிர்கட்சியாக இருப்பது உண்மையாக மக்களுக்கு உழைக்க ஒரு நல்ல வாய்ப்பு. அரசு தவறிழைக்கும் போதும் மக்கள் துண்பத்தில் இருக்கும் போது அரசை கண்டித்தும் மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றவும் நல்ல வாய்ப்பு அதே நேரத்தில் தாங்களை மக்கள் ஏன் தேர்தெடுக்கவில்லை என்ற காரணத்தை அறிந்து அதற்கான நிவாரணம் தேடுவதற்கும் அருமையான வாய்ப்பு. இதுதான் சனநாயகம் ஆனால் மராட்டிய மாநிலத்தில் நடந்தது என்ன அவரவர் மனைவிமார்கள் என்னவோ கணவன்மார்கள் வில் அம்புடன் களத்தில் நின்று வெற்றி கண்டதுபோல் கொண்டாடுகிறார்கள். தோல்வி அடைந்தவர்களோ சித்திவிநாயகர், மாவுலி கோலாப்பூர் போன்ற கோவில்களுக்கு சென்று சாமியிடம் ஏன் இந்த தண்டனை என்று கேட்கிறார்கள். ஒருவர் என்னவென்றால் என் முதுகில் மக்கள் குத்திவிட்டார் என்கிறார். ஒருவர் அவர்களின் பலவீனமே எனது பலமாகிவிட்டது என்கிறார்கள். சாமிகளா உங்களுக்கு எல்லாம் ஒட்டுபோட்ட மக்கள் நினைவில்லையா தேர்தல் முடிந்த 3 நாட்களிலேயே ஓட்டு போட்ட மக்களை மறந்து விட்டீர்கள் வரும் காலங்களில் எப்படி மக்களுக்கு சேவை செய்யபோகிறீர்கள்.
தோல்வியில் இருந்து சிவசேனா இன்னும் மீளவில்லை போல நேற்று முதல் முதலாக நிருபர்களை சிவசேனாவினர் சந்தித்தார்கள், ஒரே புலம்பல் மயம் மனோகர் போன்ற மூத்த பண்பட்ட அரசியல் தலைவர்கள் இருந்த போதும் இந்த தோல்வி எங்களுக்கான தோல்வி இல்லை இது மராட்டியர்களுக்கான தோல்வி அப்பா சொன்னதில் தப்பில்லை, மராட்டியர்களுக்கா?? உழைத்தார் ஆனால் அவரின் முதுகிலேயே குத்தி விட்டனர் என்று ஸ்டேட்மெண்ட் விடுகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக