27 அக்., 2009

கைக்கு வந்தது வாய்க்கு


மும்பை,அக்டோபர்-27
மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் புதிய துணை முதல் மந்திரிக்கான தேர்வு நடைபெற்றது. இரண்டு நபர்களின் பெயர்கள் இந்த முறை காற்றில் வந்தது. ஒன்று சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் மற்றோன்று கடந்த அரசில் துணைமுதல் மந்திரியாக இருந்த சஜன் புஜ்பால். சஜன் புஜ்பால் தேர்தல் முடிவுகள் தஙக்ளுக்கு சாதகமாக வரும் என்று கருத்துகணிப்புகள் தெரிவித்தவுடன் சும்மா இருக்காமல் ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டார். அதாவது ஜம்மு காஷ்மீரில் உள்ளது போல் 2 அரை வருடம் முதல் மந்திரி பதவி பங்கிட படும் என்றார்.(பிறகு இதை அவர் மறுத்துவிட்டார் அது வேறுகதை) ஆனால் காங்கிரசுக்கு இந்த பேச்சு பிடிக்கவில்லை. அதனால் கட்சியின் தனக்கு வேண்டபட்ட திரிபாடி போன்ற தலைவர்களின் மூலமாக சஜன் புஜ்பாலுக்கு செக் வைத்தது.

சரத் பவாரும் இம்முறை எம் எல் ஏக்கள் தங்களுக்கு குறைவாக கிடைத்தாலும் பல முக்கிய தலைவர்களும் மூத்த மந்திரிகளும் பிரபலமான தொகுதிகளில் மண்ணை கவ்வியதால் அமைதியாகி விட்டார். விளைவு மெல்ல மெல்ல சரத் பவாரின் அண்னன் மகன் பெயர் அடிபட துவங்கியது. இந்நிலையில் டில்லியில் தான் முதல் மந்திரியாக சோனியாவின் மூலம் அறிவிக்கபட்டஉடன் மகிழ்ச்சியின் உற்சாகத்தில் முக்கிய மந்திரி பதவிகள் தங்களுக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று பிட்டை போட அது சரத்பவாருக்கும் மற்றும் சில தேசிய வாத கட்சியினருக்கும் ஒப்பந்ததை மீறிய பேச்சாக போய்விட்டது. காங்கிரஸை பணியவைக்க பாய்ண்ட் கிடைத்தும்.

               காங்கிரஸில் இருந்து வந்த தேசிய வாத காங்கிரஸும் அதன் தலைவர்கள் தங்களின் வாரிசுகளையே அரசியலில் முன்  நிறுத்துகிறார்கள் என்ற பழியை தான் வாங்க கூடாது என்பதாலும், ஆரம்ப காலங்களில் இருந்தே தொண்டர்களை உடன் கொண்டு சென்ற சரத்பவார் தொண்டர்கள் இம்முறை உற்சாக குறைந்து காணப்படுகின்றனர். தன்னுடைய அண்ணன் மகனுக்கு மந்திரி பதவி கொடுப்பதன் மூலம் மேலும் சரிவை விரும்பாத சரத்பவார், முடிவான நிலையில் இருந்த அஜித பவாரின் துணைமுதல் மந்திரி கனவை கனவாகவே நிலைக்க விட்டு விட்டார். அஜித் பவாருக்கு முக்கிய பொருப்பு வழங்கபடும் என்று அவரை சமாதான படுத்தியதாக அஜித்பவாரின் நெருங்கிய வட்டாரங்கள் கூறியது.

       திங்கள் மாலை நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு நிருபர்களை சந்தித்த பிரபுல்பாய் படேல், ஆர் ஆர் பாட்டில் மற்றும் தேசிய வாத கட்சியினரின் மூத்த தலைவர்கள் கட்சியின் சட்டமன்ற தலைவராக சஜன் புஜ்பால் நியமிக்கபட்டதாக அறிவித்தனர். இந்த கூட்டத்தில் அஜித் பவார் மிஸ்ஸிங், சில மணிநேரங்களுக்கு பிறகு துணைமுதல் மந்திரிக்கும் சஜன் புஜ்பாலின் பெயர் அறிவிக்கபட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக