1 அக்., 2009

காலை வணக்கம் மும்பை ,


 மும்பையில் மட்டுமில்லை மராட்டிய மாநிலம் முழுவதுமே தேர்தல் களம்
சூடு பிடிக்க ஆரபித்து விட்டது

--------------------------------



 
கூடவே சென்செக்ஸ் ஜம்ப் ஆகுதுங்க அதனால் கையிறுப்பில் உள்ள சேர்களை தைரியமா மார்க்கேட்டில் அவிழ்த்து விடுங்கள்.
எல்லாம் G 20 செய்த மாயாஜாலம் கண்கெட்ட பின்னே சூரிய உதயம் என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள், அது சின்ன பிள்ளைகளுக்கு மட்டும் அல்ல நம்மை ஆளும் ஆட்சி யாளர்களுக்கும் கூடத்தான், கடந்த 2005-ம் ஆண்டிலேயே வரும் மூன்று வருடங்களில் கடுமையான பொருளாதார பாதிப்பு வரும் என்று நிபுனர்கள் சொல்லி இருந்தும் உலக நாடுகள் தேமே என்று இருந்து விட்டு , பலரின் வாழ்வாதாரங்கள் தொழில் நலிவுகள் எல்லாம் ஆன பிறகு குய்யோ முறையோ என்று கத்தி கொண்டு உலகம் முழுவதும் வலம் வருகிறார்கள்.

இந்தியா பொருளாதார சருக்கலில் சிக்கவில்லை என்று சொல்வது உண்மையா என்றால் அது தாங்கள் இல்லை இது வெறும் காதில் பூ சுற்றும் வேலைங்க,
இது உலக நிபுனர்களின் கருத்து இல்லைங்க நம்ம அமர்தியா சென்னோட கருத்து, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் ஏற்கனவே சட்டியில் ஒன்றும் இல்லை வெறும் சட்டியை காண்பித்தே உலக நாடுகளை ஏமாற்றிய வித்தை மன்மோகன் அண்ட் கம்பேனியின் உண்மையான சாதனை,
------------------------------------------
 
 
 

 
நாம்தான் சும்மா உலக நாடுகளில் எதிர்கால வல்லரசு இந்தியா என்று பேசிகொண்டு இருக்கிறோம், நாம தான் பேச்சில் கில்லாடியாச்சே, ஆனால் பேசாமல் 60 வருடங்களில் நாம்மை விட பல உயரங்களை தொட்டு இன்று நம்மை மிரட்டி வருகிறது. ஆமாங்க நான் சொல்வது சீனாவைத்தான்.
இன்று சீனாவிற்கு 60 வருட நாம பெரியவர்களுக்கு 60 கல்யாணம் செய்து பார்ப்பது போல் சீனாவிற்கு இன்று 60 கல்யாணம் என்றே வைத்து கொள்ளாம்,
சீனாவின் பிரமாண்டத்தை ஏற்கனவே நாம பீஜிங் ஒலிம்பிக்கில் பார்த்து ஆ என வாயை பிளந்தோம் சில கணக்கேடுப்புகள்

 இந்தியாவை விட
  • 48 சதவீதம் ராணுவ வளர்ச்சி,
  • 57 சதவீதம் விவசாயத்துறை வளர்ச்சி,
  • ஒட்டுமொத்த எலக்ட்ரானிக் துறை வளர்ச்சி
  • தனி மனித வருமான வரம்பு நம்மை விட 40 சதவீதம் அதிகம்
  • முக்கிய நகரங்கள் அனைத்திலும் தனிமனித வசதிகள் 75 சதவீதம் பூர்த்தி (நாம் வெறும் 8 சதவீதம் மட்டும் தான்)
  • கட்டுமானத்துறை, ஏற்றுமதி, மற்றும் கனரக துறைகளில் மெல்ல மெல்ல ஐரோப்பியா , ஆசியா மற்றும் தென் அமேரிக்க நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்து விட்டது.
நம்மிடம் இருந்து பிடிங்கின பணத்தில் தான் அம்பானி சகோதரர்கள் உலகம் எங்கும் நலிந்த நிறுவனங்களை வாங்குகிறர்களே அன்றி எந்த ஒரு நாடும் இந்திய நிறுவனங்களை இன்று வரை முதன்மை பணிக்காக அழைப்பு விடுக்க வில்லை,(துணை நிறுவனங்களாக பல நாடுகளில் பெரிய நிறுவனங்களுடன் கூட சேர்ந்து கோய்ந்தா போடுவது  கணக்கில் எடுபடாது) 
 

            உன்மையிலேயே இந்திய மக்களை நினைத்தால் பாவமா இருக்குங்க என்ன செய்ய பத்திரிக்கையாளர்கள் மக்களுக்கு உன்மைகளை சொல்ல பார்த்தார்கள் ஆனால் கடையில் வியாபாரமே இல்லை அதனால் விழிப்புணர்வை குறைத்து விட்டு வியாபாரத்தை பெருக்கிவிட்டனர். எந்த பத்திரிக்கை இணைய தளத்தை பார்த்தாலும் இந்த உன்மை விளங்கிவிடும்
வாழ்க இந்தியா வாழ்க இந்திய குடி மக்கள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக