30 அக்., 2009

மும்பையில் பரபரபின்றி முடிந்த சத் பூசை

உபி கார கணவர் சும்மா கிடடி இந்த வருடம் ராஜ் தாக்கரே சட்டசபைக்குள் போக போறார் நம்ம நிலை என்ன ஆகும் என்று தெரியவில்லை, அதனால் சாமிகிட்ட வேண்டுகிறேன் எங்களை காப்பாற்ற வேண்டுகிறேன் {;@

மும்பை அக்டோபர் ,25
வட இந்தியாவில் பிரபலமாக கொண்டாடப்படும் விழாக்களில் சத் பூசை எனப்படும் சூரிய பகவானை வழிபடும் விழாவும் ஒன்று இது 2005 வரை கிழக்கு உத்திர பிரதேசம் மற்றும் பிகாரை விட்டு வெளியே தெரியாத ஒரு திருவிழாவாகும். சத் என்றால் கூரை வீட்டின் கூறை போல் உலகின் கூறையான விண்ணையும் அதன் அரசன் என்று கருதப்படும் சூரியனையும் வணங்கும் விழா தமிழர்களின் பொங்களை போன்றே ஆனால் அதற்குறிய முக்கியத்தும் இந்த விழாவில் இல்லை. சத் பூசை அன்று குடும்பம் குடும்பமாக ஆறு கடற்கரை போன்ற இடங்களுக்கு சென்று மாலை சூரியன் மறையும் போதும் பூசை ஆரம்பிப்பார்கள். தேங்காய் பழம், மற்றும் கரும்பு வகைகள் வைத்து விளக்கேற்றி மறு நாள் காலை சூரியன் எழும் வரை பூசை செய்துவிட்டு வீட்டிற்கு திரும்புவார்கள். கடந்த சில வருடங்களாக மும்பை மற்றும் கிழக்கு மராட்டியத்தில் வட இந்தியர்கள் சிவசேனாவினரால் தாக்கபட்டு வந்தனர்.

இந்த நிலையில் சிவசேனாவில் இருந்து விலகி  ராஜ் தாக்கரே புதிதாக நவநிர்மான் சேனாவை துவங்கினார். இந்த கட்சியினர் வட இந்தியர்களை கடுமையாக தாக்கிவந்தனர். இதனால் மும்பை பூனா நாசிக் மற்றும் கிழக்கு மராட்டியத்தில் வாழும் பல வட இந்தியர்கள் குறிப்பாக பீகார் மாநிலத்தவர் குடும்பம் குடும்பம் குடும்பமாக தங்களின் மாநிலம் செல்ல ஆரம்பித்து விட்டனர்.
மராட்டிய மாநிலத்தில் உள்ளவட இந்தியர்கள் பீதியுடன் வாழும் நிலை ஏற்பட்டது. இதனால் வட இந்திய அரசியல் தலைவர்களும் மும்பையில் உள்ள வட இந்திய பிரபலங்களும் சேர்ந்து வட இந்தியர்களுக்கு இடையே ஏற்பட்ட அமைதியை ஏற்படுத்துவதற்காக சத் பூசையை மும்பையில் நடத்துவது என்று முடிவு செய்தனர். இதன் படி கடந்த மூன்று வருடங்களாக மும்பை ஜுகு கடற்கரையில் சத் பூசை பரபரப்பாக நடைபெற்று வந்தது. கடந்த வருடம் நவநிர்மான் சேனா இந்த பூசைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இதனால் பலத்த பாதுகாப்புடன் அமைதியாக நடந்து

முடிந்தது. இந்த வருடம் சத் பூசை நேற்று மும்பை ஜுகு கடற்கரையில் துவங்கியது. தேர்தல் வெற்றியில் நவநிர்மான் கட்சியினர் திளைத்து இருப்பதால் இந்த முறை சத்பூசை பற்றி அறிக்கை எதுவும் விடவில்லை இருப்பினும் பலத்த பாதுகாப்புடன் எவ்வித அசம்பாவிதம் எதுவும் இல்லாமல் நடைபெற்றது. சத் பூசையை மும்பையில் நடத்த முழுகாரணமாக இருந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் நிருபம் மராட்டிய மாநில  புதிய முதல் மந்திரியை தேர்ந்தெடுக்க டில்லி சென்று இருப்பதால் அவர் கலந்து கொள்ளவில்லை, ஞாயிறன்று நடந்த விழாவில் பல போஜ் பூரி நடிகர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக