11 அக்., 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அமிதாப் ஜி



 

 பிறந்த நாள் வாழ்த்துக்கள் அமிதாப் ஜி
அமிதாப்:-67



                 மும்பை உன்மை நேர்மை, கடின உழைப்பு இந்த மூன்று தாரக மந்திரத்தை கொண்டவர்களை என்றும் கைவிட்டதே இல்லை, 1969-களின் இறுதியில் ஹீரோ என்ற சூத்திரத்திற்கு சிறிதும் ஒத்துவராத ஒரு உயரமான வாலிபன் மும்பை திரைஉலகை நோக்கி பயணபட்டான். அவனது உயரத்தை கண்டதும் திரைஉலகமே எள்ளி நகைத்தது, அப்போதைய பிரபல காமிராமேன் ஒருவர் லைட் பிடிப்பதற்கு சரியான ஆள் வெகுநாட்களாக தேடிகொண்டு இருந்தேன். நான் தேடிய ஆள் கிடைத்துவிட்டான் என்று கிண்டலடித்தார். ஒரு நடிகை இவருடன் நடிக்கும் போது ஒரு ஸ்டூல் எப்போதுமே என்னுடைய உதவியாளர்கள் வைத்து இருக்கவேண்டும் என்று கூறினார்.
இவர் யாரை நம்பி வந்தாரோ அவரே இவரை உன்னுடைய குரல் நன்றாக இருக்கிறது. நீ திரைபட பின்னனி குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக விடு உன்னை நான் சேர்த்து விடுகிறேன் என்று சொன்னார். எதற்கும் சோர்ந்துவிடவில்லை, மனிதன் லட்சியங்களை அடைவது அவ்வளவு எளிதல்ல, நீ உன் மனதில் கொண்ட உறுதியை விட பல மடங்கு உன்னுடைய லட்சியங்களை உடைக்க இயற்கை முயற்சி செய்யும் அதில் இது இயற்கை உன்னை பரிசோதித்து பார்க்க செய்யும் வழிதான், இதனை வென்றுவிட்டால் இயற்கை உன்னை உன்னுடைய லட்சியத்தின் சிகரத்திற்கு கொண்டு சென்றுவிடும் என்ற ஆங்கிலேய பழமொழிக்கு ஏற்ப சோதனைகளை எதிர்கொண்டார் வென்றார.











அமிதாப் தன்னுடைய வாழ்க்கையில் எந்த ஒரு இடத்திலும் கறைக்கு இடம் கொடாதவர் திரை உலகம் என்றால் குடும்பம் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு காணாமல் போகும் என்ற விதியை மாற்றி இரண்டு தலைமுறை வெற்றி பயணம் செய்யும் அமிதாப் பச்சன், இந்திய திரைஉலகின்சூரியன் என்றால் கூட அது மிகையாகாது.
பொதுவாக பிரபலங்களை பற்றி பலர் பலவிதமாக கூறுவர்அதில் சில நம்ப முடியாதைவகளாக இருந்தாலும் எழுத வேண்டும் என்ற தலையெழுத்தில் எழுதிவைப்பார்கள்ஆனால் அமிதாப் விடயத்தில் அப்படி எதும் தோன்றவில்லைஅவரது உதவியாளரும் , திரைப்பட தயாரிப்பாளருமான
அனுபம் அவஸ்தி
அமிதாப் படப்பிடிப்பு முடிந்த உடன் புதுமுக நடிகர்களிடம் திரைப்பட வசனங்கள் முன்ன பின்னே இருப்பது போல் தொன்றும் காட்சிக்கு ஏற்றார்போல் அழுத்தி உச்சரித்து இருப்போன் மனதில் எடுத்துகொள்ளவேண்டாம், ஸ்டீல் படக்காரர்களுக்கான அமிதாப் எப்போதும் போஸ்கொடுக்க‌ தயாராக இருப்பார், சிலர் பிரபலமான பிறகு கடவுள் போல் காட்சி அளிப்பர் ஆனால் அமிதாப் இன்றும் கூட நிதானமாக படக்காரர்களின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் போஸ்கொடுத்து அவர்களை மகிழ்விப்பார்.

அமிதாப் அதிக‌மாக‌ ர‌சிக்கும் ப‌த்திரிக்கை செய்தி த‌ன்னை ப‌ற்றிய‌ வ‌த‌ந்தி எழுதிய‌ ப‌த்திரிக்கைக்கு போன் செய்து வெகுநாட்க‌ளாய் சோக‌த்தில் இருந்த‌ என்னை ம‌கிழ்வித்த‌ற்கு ந‌ன்றி என்று சொல்லிவிடுவாராம்








மாமனும் மருமகளும் 


இந்த மகிழ்ச்சி இறுதிவரை இருக்க வாழ்த்துக்கள் கூறும்
TPI {Bollywood}Mumbai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக